பல பெண்களை சீரழித்த எனது அப்பா... அவரோடு தினமும் உங்களுக்கு என்ன தொடர்பு? தாமரையை கிழிக்கும் விஜயலட்சுமி மகள்
தாமரையை கிழித்தெடுத்த விஜய்லெட்சுமியின் மகள்!!




பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தனியார் தொலைக்காட்சிகளில் வெளியான பல எண்டெர்டெயின்மெண்ட் ஷோக்களில் அதிகமாக மக்கள் மனதைக் கவர்ந்தது, அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சி தான். பல திறமைகளுக்கு ஒரு மேடை அமைத்து ஸ்டாண்ட் அப் காமெடி, மிமிக்ரி, நாடகம் போன்ற பல திறமையாளர்களை உலகிற்கு அறிமுகப்படுத்திய இந்த நிகழ்ச்சியைப் பார்த்து பல சேனல்கள் இது போன்ற நிகழ்ச்சிகளைத் துவங்கியது.
மேலும் படிக்க | “செங்களம்” ட்ரெய்லர் எனக்குள் பொறாமை ஏற்படுத்தியது - இயக்குனர் அமீர்...
அப்படி உருவான ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியானது, பல வருடங்களாக, மிக அதிகமான சீசன்களோடு தற்போது வரை ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு, வயது வரம்பின்றி பல தரப்பினரும் ரசிகர்களாக இருக்கின்றனர். குழந்தைகள் உட்பட பார்க்கும் இந்த நிகழ்ச்சியில் சமீப காலமாக சில தகாத முறையில் சில காமெடிகள் பேசப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது.
அதுவும், ப்ரைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியானது அதிகமாக குழந்தைகளையே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் தொகுப்புகளில் கொஞ்சம் கண்ணியம் வேண்டாமா? காமெடி என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனமும், சில நேரங்களில் நேரடியாகவே ஆபாச வார்த்தையை பிரயோகிப்பதுதான் இவர்களுக்கு தரமான நகைச்சுவையாக இருந்து வருகிறது.
மேலும் படிக்க | “அயலி வேறு உலகம், இது வேறு உலகம்” - செங்களம் ட்ரெயிலர் வெளியீட்டு விழா...
தொடர் உருவ கேலி...
21ம் நூற்றாண்டில், எது குறித்த விழிப்புணர்வு வந்ததோ இல்லையோ, மக்கள் தங்களது உருவங்கள் குறித்து, உருவ கேலி குறித்து ஒரு விழிப்புணர்வு நன்றாக ஏற்பட்டுள்ளது என்பது தான் உண்மை. பல வகையான மோசமான நகைச்சுவைகளை நாம் அன்றாட வாழ்க்கையில் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். உருவ கேலிகளை எதிர்த்து சோசியல் மீடியாக்கள் முதல் அனைத்து இடங்களிலும் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், இது போன்ற ஒரு சில நிகழ்ச்சிகள் இப்பொழுதும் மோசமான நகைச்சுவைகள் வந்த்க் கொண்டு தான் இருக்கின்றன.
குறிப்பாக, தன்னை உருவ கேலி செய்யக் கூடாது என பல வகையான பிரச்சாரம் செய்து வரும் பாலா, அடுத்தவர்களை மட்டும் உருவ கேலி மட்டும் தொடர்ந்து செய்து வருவது யாராலும் மருக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில், இந்த வாரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பாலா, ஒரு சூழ்நிலையை எடுத்துரைக்கிறார்.
மேலும் படிக்க | ZEE5 வழங்கும் “செங்களம்” இணையத் தொடர் டிரெய்லர் வெளியீட்டு விழா !
மோசமான களம்...
அதாவது, மதுரை முத்து கல்லூரி புரொபசராகவும், ரேஷ்மா கல்லூரி மாணவியாகவும் இருக்கிறார். இப்போது இந்த மாணவியை புரொபசர் கரெக்ட் செய்கிறார். இதனை ஸ்ருதிகா கண்டிப்பதுபோலவும் தான் அந்த சூழ்நிலை.
காமெடியே இல்லாமல் போனாலும், தனக்கு ஏதோ தெரிந்த வகையில் நகைச்சுவை செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கும் ரேஷ்மா பஷுபுலேத்தி மற்றும் ஸ்ருத்திக்கா ஜட்ஜாக இருக்கும் நிலையில், அவர்களுடன் ரோபோ போலவே அமர்ந்திருக்கிறார் தாடி பாலாஜி. இன்னொரு பக்கம், எதையாவது சொல்லியே ஆக வேண்டும் என துடிக்கும் மதுரை முத்து.
இவர்கள் செய்யும் சாதாரண நகைச்சுவையே முகம் சுளிக்க வைக்கும் நிலையில், பாலா கொடுத்த இந்த் அமோசமான சூழல் அனைவரையும் வெறுப்படைய வைத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.
மேலும் படிக்க | ரஜினியின் நடிப்பு குறித்து இயக்குநர் அமீர் சர்ச்சை பேச்சு...
மார்க் வேண்டுமென்றால் செல்போன் நம்பர் வேண்டும் என மதுரை முத்து பேச, அண்ணன் என்று அழைப்பதற்கே இப்படி ரகசியமாய் அழைப்பது ஏன் என பாலாஜி நா - கூசும்படியான வார்த்தையை உதிர்க்க, இதை விடவெல்லாம் மேலாய், கண்ணாடி எடுத்துப் போட, ஜிப்பை மேல இழுக்க என பச்சைப் பச்சையாய் ஸ்ருதிகா பேசியதைப் பார்த்து பலரும் சேனலை மாற்ற முடிவெடுத்து விட்டனர்.
ஏற்கெனவே பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளை அங்கு பணியாற்றும் ஆசிரியர்களே மதிப்பெண்களை காரணம் காட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்துவது நீடித்து வருகிறது. ஆனால் இது எதையுமே கருத்தில் கொள்ளாமல் ஏதோ சிரிக்க வேண்டும் என எண்ணத்தில் ஆசிரியர்களையும் மாணவிகளையும் சேர்த்து வைத்து கொச்சையாக பேசுகிறது இந்த குழு.
இதில் வேதனை என்னவென்றால் அவர்களின் காமெடிக்கு பார்வையாளர்கள் சிரிப்பதில்லை என தெரிந்து அவர்களே சிரித்துக் கொள்வதுதான்.. ஆபாசமில்லாத பேச்சுக்கள்தான் தரமான நகைச்சுவை என்பதை துளியும் அறிந்து கொள்ளாத இந்த நிகழ்ச்சியால் இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோரின் மனதில் வக்கிரங்கள் குடி கொள்ளும் என்பதுதான் நிச்சயம். இப்படியான ஆபாசமாக உரையாடும் இந்த பங்கேற்பாளர்கள் மீது ஏதேனும் சட்டம் பாயுமா? கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை பொழக்கப் போவது யாரு?
மேலும் படிக்க | அதிகாரப்பூர்வமாக வெளியாக தயாராகி வரும் ‘அக நக’ பாடல்...
சென்னை காரணீஸ்வரர் தெருவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட நடைபாதை இருப்பது கூட தெரியாமல் பயனற்ற நிலையில் காணப்படுகிறது.
குறையும் சாலை:
சென்னையில் மையப்பகுதியாக பார்க்கப்படக்கூடிய மயிலாப்பூர் பகுதியில் காரனேஸ்வரர் தெரு அமைந்துள்ளது. மயிலாப்பூர் சிட்டி சென்டர் பின்புறத்தில் இருந்து சென்னை காமராஜர் சாலையை இணைக்க கூடிய வகையில் நீண்ட சாலையாக காரனேஸ்வரர் தெரு அமைந்துள்ளது. சமீப நாட்களாக இந்த சாலையின் அளவு என்பது குறைந்து கொண்டே வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தனியாருக்கு:
சாலையின் ஒரு புறம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நடைபாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நடைபாதையை மறைக்கும் அளவுக்கு நீண்ட வரிசையில் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மறுபுறம் அந்தந்த வீட்டின் வாகனங்கள் மற்றும் நிறுவனங்களைச் சார்ந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தெரியாத நடைபாதை:
வாகனங்களின் நீண்ட வரிசை காரணமாக அங்கு அமைக்கப்பட்டுள்ள நடைபாதை என்பது இருப்பதே தெரியாமல் போய்விட்டது. இதன் காரணமாக அந்த நடைபாதையை பல்வேறு சமூக விரோத செயல்களுக்கு சிலர் பயன்படுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
முக சுழிப்பு:
இந்தப் பகுதியில் நடைபாதை இருப்பது கூட தெரியாத அளவிற்கு வாகனங்களால் நடைபாதை மறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த மறைவில் சென்று பலர் இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர். பள்ளி கல்லூரி செல்லக்கூடிய மாணவர்கள் இந்த வழியாக செல்லும்போது துர்நாற்றத்தின் காரணமாக முகம் சுழிப்புடன் சென்று வருகின்றனர்
சட்டவிரோதமாக:
இந்த சாலை என்பது மிகப்பெரிய சாலை தான் எனினும் தனியார் நிறுவனத்தின் டிராவல்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் இந்த பகுதியில் பேருந்து செல்வதற்கு கூட மிகுந்த சிரமமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் சாலையின் ஓரமாகவே ஜல்லி மணல் போன்றவற்றை கொட்டி வைத்து வருகின்றனர். நடைபாதையின் மேலும் கட்டுமான கழிவுகளையும் கொட்டி வருகின்றனர். அந்த நடைபாதை மறைவில் சில இளைஞர்கள் இரவு நேரங்களில் புகைபிடித்தல் போன்ற சட்டவிரோத செயல்களையும் செய்து வருகின்றனர்.
கோரிக்கை:
சென்னை மாநகராட்சி சிங்காரச் சென்னை 2.0 போன்ற பல்வேறு சென்னை அழகுப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் மாநகராட்சியின் உள்ளேயே பொதுமக்கள் பயன்படுத்தாத நிலையில் உள்ள நடைபாதையை மீட்டு தர வேண்டும் என்றும் இந்த பகுதியில் வசிக்கக்கூடிய பொது மக்களுக்கு சுகாதாரமான சுற்றுச்சூழலை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே காரணீஸ்வரர் தெருவில் வசிக்கக்கூடிய பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிக்க: விளம்பரத்திற்காக விமர்சிக்கும் துணைநிலை ஆளுநர்...!!!
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளர் களு க் கும், எம்.பி. திருச்சி சிவாவின் ஆதரவாளர் களு க் கும் இடையே பயங் கர மோதல் உண்டானது. ஒரே கட்சியில் இருந்தபோதும் ஒருவரையொருவர் தா க் கி க் கொண்டது ஏன்?
நாடாளுமன்ற மாநிலங் களவை உறுப்பினரா கவும், தி.மு. க.வின் மு க் கியத் தலைவரா கவும் இருந்து வருபவர் திருச்சி சிவா. இவரது ம கன் சூர்யா பா.ஜ. க.வு க் கு சென்று மீண்டும் தி.மு. க.வில் இணைந்தபோதும் சிவாவு க் கு கட்சியில் கூடுதல் ம கத்துவம் உண்டு. இப்படியிரு க் க திருச்சி சிவாவின் தரப்பு க் கும், தி.மு. க.வின் மு க் கிய தூணா க விளங் கும் கே.என்.நேருவின் தரப்பு க் கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
திருச்சி எஸ்.பி.ஐ. காலனியில் டென்னிஸ் மைதானம் ஒன்று கட்டப்பட்டு திறப்பு விழா நடந்து முடிந்தது. இந்த டென்னிஸ் அரங் கத்தை தமிழ க ந கராட்சி நிர்வா கத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைப்பதா க முன்னரே முடிவெடு க் கப்பட்டது. இந்த திறப்பு விழாவு க் கான பத்திரி க் கை ஏற் கெனவே அச்சடி க் கப்பட்ட நிலையில் அதில் திருச்சி சிவா-வின் பெயர் இடம் பெறாமல் இருந்ததுதான் ஆரம்பப் புள்ளி.. இதையடுத்து டென்னிஸ் விளையாட்டு மைதான திறப்பு விழாவு க் கு சென்ற தி.மு. க.வினர் அங் கு வடி க் கப்பட்டிருந்த கல்வெட்டை பார்த்ததும் அதிர்ந்து போயினர்.
பத்திரி க் கையில் இல்லையென்றால் சரி, கல்வெட்டில் கூட திருச்சி சிவா பெயர் இடம் பெறவில்லையே என ஆத்திரமடைந்த திருச்சி சிவாவின் ஆதரவாளர் கள் இது குறித்து கேட்டு விட முடிவெடுத்தனர். உடனே கே.என்.நேருவின் காரை வழிமறித்து கறுப்பு க் கொடி காட்டி அவரு க் கு எதிரா க முழ க் கமிட்டனர்.
இதையும் படி க் க : தொடரும் மாணவர் களின் தற் கொலை...ஐ.ஐ.டி.அளித்த விள க் கம்...அறி க் கை வெளியிட்ட நெல்லை முபரா க்!
இதனை க் கண்ட கே.என்.நேரு சமாளி க் க முடியாமல் காரில் ஏறி சென்றபோதும், நேருவின் ஆதரவாளர் களு க் கு ஆத்திரம் பொத்து க் கொண்டு வந்தது. அது எப்படி காரை வழிமறித்து கேள்வி எழுப்பலாம் என நினைத்தவர் கள், ஓடோடிச் சென்று திருச்சி சிவாவின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது கல்லை விட்டெறிந்தனர்.
அதோடு வாசலில் போடப்பட்டிருந்த பிளாஸ்டி க் சேர் கள், இருச க் கர வா கனங் களை அடித்து நொறு க் கி விட்டு கண்ணிமை க் கும் நேரத்தில் காணாமல் போயினர். கே.என்.நேருவின் காரை வழிமறித்து வா க் குவாதம் செய்த திருச்சி சிவாவின் ஆதரவாளர் கள் 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது தி.மு. க.வு க் குள் உட் கட்சிப் பூசல் தொடங் கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து திருச்சி சிவாவின் மரும கன் கராத்தே தியா கராஜன் கடும் கண்டங் களை விடுத்துள்ளார்.
அரசியலில் நிரந்தர நண்பர் களும் இல்லை, நிரந்தர எதிரி களும் இல்லை என்ற வார்த்தை புழ க் கத்தில் இருந்து வந்தாலும், பேரு க் கா க வெளியே எதிர்ப்பவர் கள் கூட மறைமு கமா க நண்பர் களா க இருப்பதுண்டு. ஆனால் பெயரு க் கா க உட் கட்சியிலேயே அடித்து க் கொண்ட இந்த சம்பவம் தமிழ க அரசியலு க் கு கொஞ்சம் புதிதுதான்..
சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து குளுகுளு பயணத்தை தரும் மெட்ரோ ரயில் சேவையில் பெண்களின் பங்களிப்பு குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
சென்னையின் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து வந்த மக்களுக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை வரப்பிரசாதமாக அமைந்தது.
வேலைகளுக்கு செல்பவர்களுக்கு மட்டுமின்றி மாணவர்களும் மற்றும் பலதரப்பட்டவர்களும் பயன்படுத்தும் இந்த போக்குவரத்து சேவையானது குறைந்த பணத்தில், குளு குளுவென நெடு தூரம் பயணிக்க உதவியாக இருக்கிறது.
போக்குவரத்து நெரிசல் இல்லை....,வியர்க்க விறுவிறுக்க களைப்பான பயணம் இல்லை. குறைந்த நேரத்தில், குறித்த நேரத்தில் பயணம். இதுதான் மெட்ரோ ரயில் சேவை... இதனாலேயே மெட்ரோ ரயிலில் பயணிக்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் படிக்க | இந்தியாவில் உருவாகும் ஒரு ஜானி தெப்... உண்மையில் யார் இங்கு தவறு?
மெட்ரோ ரயில் மட்டுமல்ல, மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை மற்றும் மெட்ரோ ரயில் மேம்பாலம் என அனைத்தும் நம்மை வியந்து பார்க்க வைக்கும் வியப்பாகவே உள்ளது. இப்படி நாம் பார்த்து வியக்கும் மெட்ரோ ரயிலை பெண்கள் ஓட்டி வரும் காட்சி, நம்மை மேலும் வியப்பில் ஆழ்த்துகிறது.
கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து செல்லும் மெட்ரோவின் வேகம், நடைபாதையில் நின்று கொண்டிருக்கும் நம்மையே கொஞ்சம் பயமுறுத்தத்தான் செய்கிறது.
ஆனால் இந்த ரயிலை இளம் பெண்கள் ஓட்டி வருவதை பார்க்கும் போது, உண்மையில் பாரதி கண்ட புதுமைப் பெண்களை நேரில் சந்தித்த மகிழ்ச்சி நம்மை தொற்றிக் கொள்கிறது. எந்த வித அச்சமும் இன்றி, பெண்கள் மெட்ரோ ரயிலை ஓட்டிச் சென்று, பயணிகளை பத்திரமாக இறக்கிவிட்டு, மிடுக்காக நடந்து வரும் அழகே தனிதான்.
மெட்ரோ ரயிலை ஓட்டும் போது உங்களுக்கு பயமாக இருக்காதா என்ற கேள்விக்கு "பயமா, அதெல்லாம் பயிற்சியின் போதே தெளிந்து விடும்" என்று அசால்டாக சொல்கின்றனர் இந்த வீரத் தமிழச்சிகள்.
மேலும் படிக்க | பாஜக நிர்வாகிகள் மேலும் 4 பேர் அதிமுகவில் இணைவு...அண்ணாமலை அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
பல்வேறு துறையிலும் பெண்கள் சாதனைப் படைத்து வரும் நிலையில், நாள்தோறும் மக்களுடன் தொடர்பில் இருக்கும் இந்த மெட்ரோ ரயில் ஓட்டுனர்கள், பொதுமக்களுடன் மிகவும் பரிச்சையமாகி விடுகின்றனர்.
குழந்தைகளுக்கு இவர்களை காண்பித்து, நீயும் வளர்ந்து, இவர்கள் போல் தைரியமாக சாதிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கூறும் அளவிற்கு இவர்கள் ரோல் மாடலாக மாறிவிட்டனர்.
மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் டிக்கெட் கவுண்டர், பாதுகாப்பு பணி, பொதுமக்களின் சந்தேகங்களை தீர்க்கும் Inquiry, துப்புரவு பணி என அனைத்து பணியில் பெண்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். ஆனால், மெட்ரோ ரயில் ஓட்டும் பணியில் மட்டும் வெறும் 10 பெண்கள் மட்டுமே உள்ளதாக கூறுகின்றனர்.
மேலும் படிக்க | அதிமுகவில் இணையும் பாஜக நிர்வாகிகள்...பாஜக - அதிமுக கூட்டணி உடைகிறதா...?
எனவே பெண்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்பட்டு, தங்களை ரோல் மாடலாக வைத்து, பெண்கள் பலரும் இந்த பணியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.
ஏதோ வேலைக்கு சென்றோம், சம்பாரித்தோம் என்று இல்லாமல், நாம் எந்த துறையில் இருந்தாலும் மற்றவர்கள் நம்மை திரும்பி பார்க்கும் வகையில் சிறப்பான ஒரு தடத்தில் கால் பதித்து, அடுத்த தலைமுறை பெண்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டும்.
இதுவே பெண்களின் முன்னேற்றத்திற்கு நாம் செய்யும் மிகப் பெரிய தூண்டுகோல் எனலாம். அந்தவகையில், இந்த வீர மங்கைகள், ஒரு புதிய தடத்தில், கால் பதித்து, பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் என்றால் அது மிகையில்லை.
மாலை முரசு செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் ஜெகதீஷூடன் செலினா...
மேலும் படிக்க | லண்டனில் ராகுல்... இந்தியாவை அவதூறு செய்பவர் இந்தியப் பிரதமரே...!!!
நடிகர் நவாசுதீன் சித்திக்-கின் குடும்ப தகராறு பெரும் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், தற்போது தன் பக்க நியாயத்தை முதன் முறையாக வெளிப்படுத்தியுள்ளார்.
உலக அளவில் ஒரு விவாகரத்து கதை சர்சையைக் கிளப்பியது என்றால், அது ஜானி தெப் மற்றும் அவரது முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் கதை தான். அதிகபட்ச வழக்குகளில் ஆண்களே வில்லன்களாக இருக்க, பெண்கள் மீதான பார்வையை ஒட்டுமொத்தமாக உலகத்துக்கே மாற்றிக் காட்டியது இந்த வழக்கு.
ஒரு பெண் தனது கணவரைத் தாக்கி அவரை உடலளவிலும் மனதளவிலும் கொடுமை படுத்திய கதையால், உலகமே அதிர்ச்சி அடைந்து அதில் இருந்து இன்றும் பலர் மீளாத நிலையில், மேலும் அப்படி ஒரு கதை அதுவும் இந்தியாவிலேயே உருவாகி வருகிறதா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க | காதலரால் தாக்கப்பட்ட நடிகை அனிக்கா....!!
நெபோடிசம் என்ற வார்த்தை கேட்டாலே அது பாலிவுட் தான் என்று கூறிய காலத்தில் எந்த ஒரு பின்னணியும் இன்றி தனது சொந்த உழைப்பால திறமையை மட்டுமே நம்பி சினிமாவுக்குள் நுழைந்த் அனடிகர்களில், இன்று தனக்கென்று ஒரு அடையாளம் பதித்துக் கொண்டவர் தான் நடிகர் நவாசுதீன் சித்திக்.
பல லட்சங்கள் சம்பாதித்து தனது சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய நவாசுதீனுக்கு குடும்பத்தில் பெரும் பிரச்சனை நிலவி வருவது நமக்கு சோசியல் மீடியாக்கள் மூலமே தெரிகிறது. நவாசுதீன் சித்திக்கின் மனைவி ஆலியா சித்திக், சமீப காலங்களில் பல வீடியோக்களையும் போட்டோக்களையும் தனது சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகிறார்.
மேலும் படிக்க | பாலா படத்திலிருந்து சூர்யா விலகிய நிலையில் நடிகையும் விலக்கப்பட்டார்...!!
அதிலும் கடந்த வாரம் அவர் வெளியிட்ட வீடியோ மிகவும் வைரலாகி பல விமர்சனங்களைப் பெற்று வந்தது. நள்ளிரவில் தன்னையும் தனது இரண்டு குழந்தைகளையும் வீட்டை விட்டு வெளியிஏ அனுப்பியதாக குற்றம் சாட்டும் அந்த வீடியோ வைரலானதை அடுத்து, அனைவர்ம் நவாசுதீன் பக்கம் திரும்பி அவர் பக்க கதை என்ன என கேட்கத் துவங்கினர்.
இதனையடுத்து, முதன் முறையாக் அனவாசுதீன் தனது கருத்துகளை வெளிப்படுத்தியதோடு, அவரது பிரிந்த மனைவி ஆலியா சித்திக் மீதும் ஒரு சில புகார்களைக் கூறியுள்ளது தற்போது பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | உதவி வேண்டி வீடியோ வெளியிட்ட பிதாமகன் தயாரிப்பாளர்...!!
தனது இன்ஸ்டாகிராம் பதிவில், கடந்த 2 ஆண்டுகளாக ஆலியாவுக்கு மாதந்தோறும் சுமார் 10 லட்சம் சம்பளம் வழங்கப்படுவதாகவும், அவர் தனது 3 படங்களுக்கு வருமானம் ஈட்டுவதற்காக அவருக்கு நிதியுதவி செய்ததாகவும் நவாஸ் தெரிவித்தார்.
அவர் தனது குழந்தைகளை துபாயில் விட்டுச் சென்றதாகவும், கடந்த 45 நாட்களாக பள்ளியில் இருந்து அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு, அதிக பணம் வேண்டும் என்று மிரட்டி இந்த நாடகத்தில் இழுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். தனது குழந்தைகளின் நலனுக்காக எந்த எல்லைக்கும் செல்வேன் என்றும், நீதித்துறையின் மீது தொடர்ந்து நம்பிக்கை வைப்பேன் என்றும் நவாஸ் கூறி குறிப்பை முடித்தார்.
இந்த குறிப்பு தற்போது அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருவதோடு நவாசிற்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். மேலும், நவாசுதீன் இந்திய ஜானி தெப்பாக மாறொ விடுவாரோ என தங்களது கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | ”மக்களுக்கு உதவுவதே திருப்தி அளிக்கிறது...” நடிகர் சோனு சூட்!!
View this post on Instagram