கடந்த சில தினங்களாக நீட் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் எனக் கூறிய திமுக, தற்போது பயிற்சி நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. நீட் தேர்வால் வரும் பிரச்னைகள் குறித்து விசாரிக்க குழு அமைத்துள்ளதாக கூறுகிறது. இதனால் இந்த வருடம் நீட் தேர்வு வருமா? வரதா? என்பதில் மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் அன்பில் மகேஷ், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நீட்தேர்வு குறித்த முக்கிய முடிவுகளை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பார் என்றார்.