திருமணமாகி 28 நாட்களே ஆன இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை...

சென்னையில் திருமணமாகி 28 நாட்களே ஆன இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

திருமணமாகி 28 நாட்களே ஆன இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை...

சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி திவ்ய பாரதி (23). இந்த மாதம் 1 ஆம் தேதி பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு விஸ்வநாதனுடன் திவ்ய பாரதிக்கு திருமணம் நடந்தது.  இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் முதல் தளத்திற்குச் சென்ற திவ்ய பாரதி நீண்ட நேரமாக கீழே இறங்கி வரவில்லை. சந்தேகமடைந்த உறவினர்கள் முதல் தளம் சென்று கதவை தட்டி பார்த்தும் திறக்கவில்லை. உடனே உறவினர்கள் அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  

போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்தபோது சிமெண்ட் ஓட்டின்  இரும்பு பைப்பில் புடவையால்  தூக்குமாட்டி கொண்டு இறந்த நிலையில் திவ்ய பாரதி இருந்ததைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் பிடிக்காத காரணத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையான காரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். 

விஸ்வநாதனுக்கு வயது 33 என்பதால் 23 வயதான திவ்ய பாரதிக்கு திருமணத்தில் விருப்பமில்லை என குடும்பத்தினரிடம் தெரிவித்ததாக தெரிகிறது. ஆனால் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்து விட்டது. திருமணத்திற்கு பிறகு விஸ்வநாதனுடன் ஒன்றாக வாழாமல் அவர் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து விஸ்வநாதன் விவாகரத்து கேட்டு அவருக்கு நோட்டீஸ் கொடுத்ததால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்றும் இதையடுத்து திவ்ய பாரதி தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.