விரிவான விசாரணை அறிக்கை திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்படும்...!!!

விரிவான விசாரணை அறிக்கை திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்படும்...!!!

கலாஷேத்திரா மாணவிகள் பாலியல் புகார் குறித்தான விரிவான விசாரணை அறிக்கை திங்கட்கிழமை அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி கூறியுள்ளார்.

சென்னை திருவான்மியூர் உள்ள கலாஷேத்திரா வளாகத்தில் உள்ள ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் படிக்கும் மாணவிகளை பேராசிரியர்கள் உட்பட நான்கு நபர்கள் பாலியல் துன்புறுத்தல்கள் செய்ததாக 175 க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள்ளாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் அது குறித்து  தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி நேரில் வருகை தந்து விசாரணை நடத்தினார்.

விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி , இந்த கலாஷேத்திரா விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரணை செய்து திங்கள் கிழமைக்குள் அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும், சில மாணவிகள் ஹைதராபாத் சென்றுள்ளதால் ஐந்து மாணவிகளை  ஸ்கைப் மூலமாகவும் 12 மாணவிகளை  நேரில் விசாரணை செய்ததாகவும் கூறினார்.

மேலும் நூற்றுக்கு மேற்பட்ட மாணவிகள் எழுத்துப்பூர்வமாக என்னிடம் புகார் அளித்துள்ளனர் என்று தெரிவித்ததோடு மாணவிகள் புகார் அளித்ததற்கான ஆதாரங்களும் உள்ளன என தெரிவித்தார்.  மேலும், திங்கள் கிழமை மாணவர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளதால் போராட்டத்தை நிறுத்த சொல்லி மகளிர் ஆணையம் சார்பில் கோரிக்கை வைத்ததாகவும் மாணவர்களும் போராட்டத்தை கைவிடுவதாக வாக்குறுதி அளித்துள்ளதாகவும் கூறினார்.

இதையும் படிக்க:  சென்னை சென்ட்ரலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்...!!