பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசிச்சென்ற கொடூர தாய்...! பெரம்பலூரில் பரபரப்பு

பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை, முட்புதரில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரம்பலூரில் அரங்கேறியுள்ளது.
பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசிச்சென்ற கொடூர தாய்...! பெரம்பலூரில் பரபரப்பு
Published on
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா மரவனத்தம் கிராமத்தில்  ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பாலத்தின் அருகே உள்ள முட்புதரில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை உயிரிழந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியில் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முட்புதரில்  இறந்து கிடந்த சிசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த சிசுவை இப்படி வீசி சென்ற கல் நெஞ்சம் கொண்ட தாய் யார்? அல்லது இந்த சிசு கள்ளக்காதலுக்கு பிறந்த குழந்தையா? என பல்வேறு கோணங்களில்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருப்பினும், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை, முட்புதரில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com