பள்ளி மாணவியின் செல்போனுக்கு தொடர்ச்சியாக வந்த ஆபாச மெசேஜ்..சிக்கிய கல்லூரி மாணவன்!!

பள்ளி மாணவியின் செல்போனுக்கு தொடர்ச்சியாக வந்த ஆபாச மெசேஜ்..சிக்கிய கல்லூரி மாணவன்!!
Published on
Updated on
1 min read

மாங்காடு அருகே 11 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கல்லூரி மாணவன் விக்னேஷ் என்பவர் போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை அடுத்து மாங்காடு அருகே 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார்.

அந்த மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தில் "கல்லறையும்,தாயின் கருவறை மட்டுமே பாதுகாப்பான இடம்" என்றும் உறவினர்கள் என யாரையும் நம்ப வேண்டாம் எனவும் மாணவி உருக்கமாக எழுதியுள்ளார்.

இதனையடுத்து,மாணவியின் செல்போன் மற்றும் கடிதத்தை கைப்பற்றிய போலீசார் சந்தேகத்தின் பேரில் 17 வயது சிறுவன் உட்பட 20 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில்,மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பான விசாரணையை தொடர்ந்து, கல்லூரி மாணவர் விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்மீது போக்சோ,பாலியல் வன்கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவியின் செல்போனை ஆய்வு செய்ததில் இவர் ஆபாசமாக மெசேஜ் அனுப்பியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து,இவர் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com