செல்போன் பறிக்க முயன்ற போது இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்...!

செல்போன் பறிக்க முயன்ற போது இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்...!

இந்திரா நகர் பறக்கும் ரயில் நிலையத்தில் செல்போன் பறிக்க முயன்ற போது இளம் பெண் உயிரிழந்த சம்பவத்தில் இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோட்டூர்புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் ப்ரீத்தி. இவர் தினமும் கோட்டூர்புரத்தில் இருந்து இந்திரா நகர் வரை பறக்கும் ரயிலில் பயணம் செய்வது வழக்கம். அந்த வகையில், கடந்த 2 ஆம் தேதி பறக்கும் ரயிலில் சென்ற ப்ரீத்தி, இந்திரா நகர் ரயில் நிலையத்தில் இறங்கும்போது அடையாளம் தெரியாத நபர்கள் செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ப்ரீத்திக்கு பலத்த காயம் ஏற்பட்டது.  

இதையும் படிக்க : ”திமுக கடைபிடிக்கும் சமூக நீதிக் கொள்கையே 'மாமன்னன்’ திரைப்படம்” - மேயர் பிரியா ராஜன்!

இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ப்ரீத்தி, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனிடையே, இளம்பெண்ணிடம் இருந்து செல்போன் பறிக்க முயன்ற விக்னேஷ் மற்றும் மணிமாறன் ஆகிய இருவரையும் கொலை வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.