தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்ட வாலிபர்கள் :  சிசிடிவி கேமராவால் சிக்கிய சம்பவம்!!

புதுச்சேரியில் ஆடு திருடிய இரண்டு வாலிபர்களை சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்ட வாலிபர்கள் :  சிசிடிவி கேமராவால் சிக்கிய சம்பவம்!!

புதுச்சேரி திருவாண்டார்கோயில் பகுதி இந்திரா நகரில் வசித்து வருபவர் சற்குண பாண் டியன். இவர் அண்டை மாவட்டங்களில் இருந்து உயர்ரக கலப்பின ஆடுகளை வாங்கி பராமரித்து வருகிறார். இவர், தனது ஆடுகளை திருவாண்டார்கோயில் ஏரிக்கரை பகுதியில்  மேய்ச்சலுக்கு அனுப்பி உள்ளார்.  அன்று மாலை மேய்ச்சலில் இருந்த ஆடுகளை சரிபர்த்தபோது, ரூ.13 ஆயிரம் மதிப்புடைய உயர் ரக கலப்பின ஆடு ஒன்று காணாமல் போனது தெரியவந்தது.

இது குறித்து சற்குணபாண் டியன் திருபுவனை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஏரிக்கரை அருகே பொருத்தப்பட் டிருந்த சி.சி. டி.வி கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இரண்டு வாலிபர்கள் ஒரு ஆட் டின் கால்களை கயிற்றால் கட் டி இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்வது பதிவாகி இருந்தது. இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்து விசாரித்த போது, அவர்கள்  கொம்பாக்கத்தை சேர்ந்த விஷ்ணு (22), வழுதாவூரை சேர்ந்த ஆகாஷ் (23) என்பது  தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில்  திருவாண்டார்கோயில் ஏரிக்கரையில் ஆடு திரு டியதையும், அதே போல் சில நாட்களுக்கு முன்னர் திருவாண்டார்கோயில் பெரியபேட் பகுதியில் இரண்டு ஆடுகளை திரு டியதையும் ஒப்புக்கொண்டுள்ளனர்,  இதையடுத்து அவர்களிடம் இருந்து திருட்டுபோன ஆடுகளை   பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.