போலீஸ்காரர் மனைவியையே பாத்ரூமில் வைத்து போட்டோ எடுத்த இன்னொரு போலீஸ்காரர்!! என்ன தைரியம் டா உனக்கு?

போலீஸ்காரர் மனைவியை பாத்ரூமில் போட்டோ எடுத்த மற்றொரு போலீஸ்காரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அரங்கேறியுள்ளது.

போலீஸ்காரர் மனைவியையே பாத்ரூமில் வைத்து போட்டோ எடுத்த இன்னொரு போலீஸ்காரர்!! என்ன தைரியம் டா உனக்கு?

ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள வன்னியம்பட்டி மொட்டமலை என்ற பகுதியில் 11-வது பட்டாலியன் காவலர் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் திருவேங்கட புரத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார், அதே சமயம் மனைவி வீரலட்சுமி மற்றும் குடும்பத்தினருடன் அங்குள்ள குடியிருப்பில் குடியிருந்தும் வருகிறார். 

இதேபோன்று மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவரும் அதே குடியிருப்பில் போலீஸ்காரராக வேலை பார்த்துக்கொண்டு அங்கேயே குடியிருந்து வருகிறார். 

இந்நிலையில் சம்பவத்தன்று வீரலட்சுமி அவரது வீட்டு பாத்ரூமில் இருக்கும்போது போலீஸ்காரர் ஆனந்த் செல்போன் மூலம் போட்டோ எடுத்துள்ளார். இதுகுறித்து வீரலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றத்தில் ஈடுபட்ட போலீஸ்காரர் ஆனந்த்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, அனைவருக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய போலீசாரே இந்த செயலில் ஈடுபட்டிருப்பது வேலியே பயிரை மேயும் கதையாக இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.