நண்பர் இறந்த துக்கத்தில் ஆட்டோ டிரைவர் தற்கொலை...

சென்னையில் நண்பர் இறந்த துக்கத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நண்பர் இறந்த துக்கத்தில் ஆட்டோ டிரைவர் தற்கொலை...

குரோம்பேட்டை அடுத்த திருநீர்மலை பகுதியை சேர்ந்தவர் சரத்குமார். இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும் ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதற்கிடையில் இவருடைய நெருங்கிய நண்பர் இரண்டு மாதங்களுக்கு முன்பாக தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நெருங்கிய நண்பரை இழந்த இவர் அன்றிலிருந்து மிகுந்த மன வேதனையடைந்து அதிக அளவில் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நேற்று இரவு அதிக மதுபோதையில் இருந்த சரத்குமார், வீட்டில் உள்ள படுக்கை அறையினை உட்புறமாக தாழிட்டு உள்ளே இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விடிந்து பல மணிநேரம் ஆகியும் சரத்குமார் படுக்கையறையை திறக்காததால் சந்தேகமடைந்த மனைவி ராஜேஸ்வரி மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் படுக்கை அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு சரத்குமார் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்து அவர்கள், குரோம்பேட்டை காவல்நிலையத்திற்கு  தகவல் அளித்தனர்.

தகவலின்பேரில் வந்த போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.