90 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பைக் திருட்டு... தொடர்ந்து கைவரிசையை காட்டும் கொள்ளையர்கள்!!

90 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பைக் திருட்டு... தொடர்ந்து கைவரிசையை காட்டும் கொள்ளையர்கள்!!
Published on
Updated on
1 min read

முதுகுளத்தூர் பகுதியில் இருசக்கர வாகனம் திருட்டு சம்பவம் தொடர்ந்து நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த மாதவன் ஏசி மெக்கானிக்காக தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார்.  தனது 90 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை தனது வீட்டு முன் முன்பாக நிறுத்திவிட்டு தூங்கியுள்ளார்.

நள்ளிரவில் அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் முகத்தை துணியால் மூடி பைக்கை திருடி சென்றுள்ளனர்.  தனது வீட்டின் முன் அமைக்கப்பட்ட சிசிடிவி வீடியோ காட்சியை ஆய்வு செய்த போது மாதவனின் பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.  இது குறித்து மாதவன் முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்ற போலீசார் மாதவன்  பைக்கை மர்ம நபர்கள்  திருடி சென்ற வீடியோ காட்சிகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை  தேடி வருகின்றனர்.

முதுகுளத்தூர் பகுதியில் இதுபோன்று இருசக்கர வாகனம் திருட்டு சம்பவம் தொடர்ந்து நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.  உடனடியாக காவல்துறையினர் துரித நடவடிக்கை எடுத்து விலை உயர்ந்த இரு சக்கர  வாகனத்தை குறிவைத்து திருடும் பணியில் ஈடுபடும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com