#Breaking | ஓசூரில் தலை, கை கால்கள் இல்லாத ஒரு ஆண் உடல் மீட்கப்பட்டுள்ளது...

கிருஷ்ணகிரி ஓசூரில் மர்மமான முறையில் இறந்த ஒரு ஆணின் சடலம் கை, கால், தலை இல்லாமல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Breaking | ஓசூரில் தலை, கை கால்கள் இல்லாத ஒரு ஆண் உடல் மீட்கப்பட்டுள்ளது...

கிருஷ்ணகிரி : ஓசூர் அடுத்த ஆவலப்பள்ளி ஏரியில் தலை, கை, கால்கள் இல்லாமல் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை போலீசார் கைப்பற்றி விசாரணை அடத்தி வருகின்றனர். ஒரு வேளை கொலை செய்து இப்படி தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

அந்த ஆணின் உடல், 27 முதல் 3-0 வயது மதிக்கத்தக்கதாக ஈருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அடையாளம் தெரியாத அந்த உடல் குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார். இது கைகளால் அறுக்கப்பட்ட சடலமா, அல்லது மெஷினால் அறுக்கப்பட்டதா எனவும் போலீசார் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த சடலத்தை முதலில் பொது மக்கல் தான் பார்த்ததாகக் கூறப்படும் நிலையில், தகவலை உடனடியாக பாகலூர் போலீசாருக்கு அவர்கள் அளித்து வரவழைத்ததாகவும் கூறப்படுகிறது.

சடலமாக மீடகப்பட்டவர் குறித்த தகவல்கள் குறித்து விசாரிக்கும் போது அவர் ஓசூர் பகுதியைச் சேர்ந்தவர் தானா அல்லது அண்டை மாநிலட்ய்ஹ்தைச் சேர்ந்தவரா என்ற கோணத்திலும் விசாரிக்க இருப்பதாக தகவல்கல் கூறுகின்றன.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com