கஞ்சா போதையில் இருந்த அண்ணன்... தட்டிக் கேட்ட தங்கையை வெட்டி கொன்ற சம்பவம்...

ராமநாதபுரத்தில் கஞ்சா போதையில்  சொந்த அண்ணனே தங்கையை வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
கஞ்சா போதையில் இருந்த அண்ணன்... தட்டிக் கேட்ட தங்கையை வெட்டி கொன்ற சம்பவம்...
Published on
Updated on
1 min read

ராமநாதபுரத்தில் நேரு நகர் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். கஞ்சாவிற்கு அடிமையான மகன் சரண் அவ்வபோது வீட்டில் தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கஞ்சா போதையில் வீட்டிற்கு வந்த மகன் சரண் குடும்பத்தாரிடம் சண்டையிட்ட போது தங்கை சுவாதி அண்ணன் சரணை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சரண், தங்கை எனும் பாராமல் அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினார். வெளியே சென்றிருந்த பெற்றோர் வீடு திரும்பிய போது மகள் கொலைசெய்யப் பட்டு இறந்த கிடந்தது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து  கேணிக்கரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்து விட்டு தப்பி ஓடிய அண்ணன் சரணை தேடி வருகின்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com