பட்டாசு வெடிப்பதில் போட்டி... இரு தரப்பினரிடையே மோதல்...

முசிறி அருகே பட்டாசு வெடிப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில், காவல்துறையினரின்  வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதால்  பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
பட்டாசு வெடிப்பதில் போட்டி... இரு தரப்பினரிடையே மோதல்...
Published on
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் முசிறி அருகே கொளக்குடி கிராமத்தில் ஒரு சமூகத்தை சேர்ந்த சங்கத்தின் பெயர் பலகை வைத்துள்ளனர். இந்த பெயர் பலகையின் அருகே மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்ததாக கூறப்படுகிறது.

இதனால், இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியதில் 2 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் சமாதானம் செய்தனர். 

அப்போது சிலர்  போலீசாரின் வாகனத்தின் கண்ணாடி உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சர்ச்சைக்குறிய பெயர் பலகை அகற்றப்பட்டன.  மேலும் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருவதால்  போலீசார் குவிக்கப்பட்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com