புதிய சுடுகாடு அமைப்பதில் மோதல்; தடியடி நடத்திய போலீஸ்

புதிய சுடுகாடு அமைப்பதில் மோதல்; தடியடி நடத்திய போலீஸ்
Published on
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சுடுகாடு அமைப்பதில் மோதல் ஏற்பட்டதால் காவல் துறையினர் தடியடி நடத்தினர். ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சியில் உள்ள எஸ்.எல்.எஸ். மில் பகுதியில் வசிக்கும் மக்கள், இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய ஆரணி - வேலூர் நெடுஞ்சாலை அருகே இடத்தை தேர்வு செய்தனர்.

அப்போது, அங்கு வந்த சேவூர் மற்றும் ரகுநாதபுரம் கிராம மக்கள் சுடுகாடு அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இருதரப்பு மக்களிடையே கைகலப்பு ஏற்பட்ட நிலையில், தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் சுடுகாடு அமைக்கக் கூடாது எனக்கூறி வருவாய்த்துறை அதிகாரிகள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com