ஒப்பந்த பணியாளர் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி!!

தேனி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மாற்று திறனாளி ஒப்பந்த பணியாளர் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒப்பந்த பணியாளர் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி!!

தேனி அரசு  மருத்துவமனையில் செல்வராஜ் என்ற மாற்றுதிறனாளி லிப்ட் ஆப்ரேட்டராக  வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் 5வது மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறினார்.

இதைக்கண்ட சக பணியாளர்கள் மாடிக்கு சென்று அவரை பத்திரமாக மீட்டனர். மருத்துவமனை முதல்வர் அழைத்து விசாரித்ததில், தனியார் ஏஜென்சி சூப்பிரவைசர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்து வாங்காமலும், பணியிடமாற்றம் செய்து தொந்தரவு செய்ததாகவும் தெரிவித்தார். அப்போது அங்கு வந்த ஒப்பந்த பணியாளர்கள் சூப்பிரவைசர்களை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.