தவறை தட்டி கேட்ட இளைஞருக்கு, சமூக விரோதிகளின் சரமாரி பரிசு!!

தவறை தட்டி கேட்ட இளைஞருக்கு, சமூக விரோதிகளின் சரமாரி பரிசு!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே போலீசார் கண் முன்னே இளைஞர் ஒருவரை மதுபோதை கும்பல் சரமாரிய தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நேற்று இரவு கோவிலுக்கு சென்று அம்மன் சன்னதி வழியாக சென்று கொண்டிருந்த இளம்பெண்களிடம் ஒரு கும்பல் வம்பிழுத்து தொந்தரவு செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து கோவில் புறக்காவல் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் அம்மன் சன்னதி பகுதிக்கு சென்று அங்கு நின்ற கும்பலிடம் இது குறித்து விசாரித்துள்ளார்.

அப்பொழுது பெண் காவலர் மற்றும் அப்பகுதியில் நின்றவர்களிடம் அந்த கும்பல் வாக்குவாதம் செய்துள்ளது. பொதுமக்களுடன் வாக்குவாதம் வலுக்கவே அந்த கும்பல் அங்கிருந்து ஓட முயன்றுள்ளது  அப்போது கும்பலில் ஒருவரை இளைஞர் ஒருவர் பிடிக்க முயன்றுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அப்பகுதியில் கிடந்த உருட்டு கட்டை எடுத்து, பிடிக்க முயன்ற நபரை  சரமாரியாக கொடூரமாக தாக்கியுள்ளது. இந்த சம்பங்கள் அனைத்துமே பெண் காவலரின் கண்முன்னே அரங்கேறியுள்ளது. இது குறித்து விசாரித்து, தாக்குதலில் ஈடுபட்ட ஆலங்குளத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

இதில், மற்றவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தாலும், சமூக விரோதிகளை பிடிக்க முயன்ற இளைஞர் உடலளவில் பாதிக்கப்பட்டுள்ளார். தவறே செய்யாத அந்த இளைஞர், செய்த தவறு என்னவென்றால் தவறு செய்தவர்களை பிடிக்க முற்பட்டது தான்.

இந்த சங்கரன்கோவில் அம்மன் சன்னதி பகுதியில் இரவு நேரங்களில் அங்குள்ள பெட்டிக்கடையில் அமர்ந்து மது அருந்துவதும், அவ்வழியாக செல்லும் பெண்களை கேலி கிண்டல் செய்வதும் என,  அப்பகுதியே  சமூக வீரோதிகளின் கூடாரமாக இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இளம் பெண்களை தொந்தரவு செய்த கும்பலை தட்டி கேட்டவருக்கு பெண் காவலர் கண் முன்பு தர்ம அடி விழுந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க || சென்னை-ஜெர்மனி இடையே மீண்டும் தினசரி விமான சேவை!!