லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் 2 வது நாளாக அமலாகத்துறை சோதனை!!

லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு, மருமகன் வீடு மற்றும்  அலுவலகத்தில் இரண்டாவது நாளாக அமலாகத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை போயஸ் தோட்டம் கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு, திருவல்லிக்கேணியில் உள்ள அலுவலகம் ஆகியவற்றில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே அமலாக்க துறையினர் பல்வேறு கட்டங்களாக தொடர் விசாரணையையும், சோதனையையும் மேற்கொண்ட நிலையில் நேற்று முதல் மீண்டும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதே போல் நுங்கம்பாக்கத்தில் உள்ள மார்ட்டின் மகனுக்கு சொந்தமான அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகின்றன. மார்ட்டினின் மருமகனான ஆதவ் அர்ஜுன் வீடுகளிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

கோவை  கவுண்டம்பாளையத்தில்  உள்ள மார்ட்டின் வீட்டில்  இரண்டாவது நாளாக வருமானத்துறை  அதிகாரிகள்  சோதனை  மேற்கொண்டு வருகின்றனர். கோவை காந்திபுரத்திலும் ரெய்டு நீடிக்கிறது. சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது

குறிப்பாக 2009 ஆம் ஆண்டு முதல் 2010 ஆண்டு கால கட்டத்தில் சிக்கிம் மாநில லாட்டரி விதிகளை மீறி மார்ட்டின் 910 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டியதாக அவர் மீது புகார் எழுந்தது. இதன் மூலம் 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் சட்டவிரோதமாக பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக எழுந்துள்ள புகாரை எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்தியுள்ள நிலையில், தற்போது வருமானவரித் துறையினர் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.