வேலை வாங்கித் தருவதாகக் கூறி 15 பேரிடம் பணம் மோசடி! முன்னாள் அமைச்சர் சரோஜா கணவருடன் நீதிமன்றத்தில் சரண் !!

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் ராசிபுரம் ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்ததை தொடர்ந்து அவருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது.

வேலை வாங்கித் தருவதாகக் கூறி 15 பேரிடம் பணம் மோசடி! முன்னாள் அமைச்சர் சரோஜா கணவருடன் நீதிமன்றத்தில் சரண் !!

தமிழக முன்னாள் சத்துணவுத் திட்ட துறை அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகநிரஞ்சன் இருவரும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 15 பேரிடம் 76 லட்சம் பணம் மோசடி செய்ததாக அவரது உறவினர் குணசீலன் கடந்த 8  மாதங்களுக்கு முன்பு ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

இதையடுத்து முன்ஜாமீன் பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதன் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்  வழங்கியது. மேலும் சென்னை உயர் நீதிமன்றம் ராசிபுரம்  ஒருகிணைந்த குற்றவியல் நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறும்  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகநிரஞ்சன் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர். இதையடுத்து அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது .  மேலும் மறு உத்தரவு வரும்வரை நாமக்கல் பொருளாதார குற்றபிரிவில் விசாரணை அதிகாரி முன்பு வாரம் தோறும் கையெழுத்திட வேண்டும் என்று  நீதிபதி ரெகனாபேகம் உத்தரவிட்டார்.