போலீஸ் போட்ட பலே பிளான்.. வரிசையாக சிக்கிய கஞ்சா வியாபாரிகள்!! எப்படி தெரியுமா?

G pay மூலம் பணம் பெற்றுக் கொண்டு கஞ்சா விற்று வந்த 3 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸ் போட்ட பலே பிளான்.. வரிசையாக சிக்கிய கஞ்சா வியாபாரிகள்!! எப்படி தெரியுமா?

தாம்பரம் மாநகர காவல் துறை எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக காவல் துறையிர்க்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். 

அப்பொழுது பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகில் இரு மாணவர்கள் மறைவிடத்தில் புகை பிடிப்பது கண்டு அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் கஞ்சா புகைத்ததை ஒப்பு கொண்டுள்ளனர்.

மேலும் அவர்களை விசாரித்ததில் GPay மூலம் பணம் அனுப்பினால் வடபழனியை சார்ந்த மோகன் என்பவர் எங்களுக்கு கஞ்சா வழங்குவார் என கூறியுள்ளனர். இதை தொடர்ந்து பலே பிளான் போட்ட போலீசார் மாணவர்களிடம் கஞ்சா விற்கும் நபர் மோகனுக்கு 12 ஆயிரம் ரூபாய் அனுப்பி கஞ்சா கேக்க கூறியுள்ளனர்.

இதையடுத்து, பணத்தைப் பெற்றுக் கொண்ட மோகன் போரூரில் வந்து கஞ்சாவை வாங்கி செல்லும்படி கூறியுள்ளார். 

இதைத் தொடர்ந்து, மாணவர்களை பின்தொடர்ந்து சென்ற போலீசார், மாணவர்களிடம் கஞ்சா கொடுக்க வந்த மோகனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்..

இதைஅடுத்து போலீசார் மோகனை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்ததில், ஆட்டோ ஓட்டுநர் செந்தில் என்பவர் தனக்கு கஞ்சாவை கொடுப்பதாகவும்.. அதற்கு முன் செந்திலுக்கு GPay மூலம் பணம் அனுப்ப வேண்டும் எனவும் மோகன் கூறியுள்ளார். அப்போது செந்திலுக்கும் மோகன் மூலம் 15000 GPay அனுப்பி உள்ளனர்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட செந்தில் அம்பத்தூர் ராக்கி திரையரங்கம் அருகே  வர சொல்லியுள்ளார்.

அங்கு திட்டம் தீட்டி கஞ்சா வியாபாரியை பிடிக்க மறைந்திருந்த போலீசார் ஆட்டோவில் வந்த செந்திலையும் உடன் வந்து திலீப்குமாரையும் கஞ்சாவுடன் கையும் களவுமாக பிடித்து ஆட்டோவை தணிக்கை செய்ததில் நான்கு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து போலீசார் செந்திலை விசாரணை செய்ய அம்பத்தூரை சார்ந்த முரளியிடம் பணம் கொடுத்து அனுப்பினால் விசாகப்பட்டினம் அருகில் உள்ள துளி என்ற ஊருக்கு சென்று அங்கிருந்து கஞ்சாவை வாங்கி டிராவல் பேக்கில் துணிகளுக்கு இடையில் மறைத்து ரயிலில் எடுத்து வருவதாகவும் அதை திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டில்  தனி வீடு வாடகை எடுத்து அதில் வைத்து மூன்று பேரும் ஏரியா பிரித்து விற்பனை செய்வதாகவும் ஒப்புக்கொண்டார்.

 இதை எடுத்து வேப்பம்பட்டு சென்று அந்த வீட்டை போலீசார் சோதனை செய்ததில் அங்கும் நான்கு கிலோ கஞ்சா கிடைத்துள்ளது. மொத்தம் 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மோகன், செந்தில், திலீப்குமாரை கைது செய்து அவர்கள் பயன்படுத்தி வந்த ஆட்டோ மற்றும் கஞ்சா விற்பனை செய்து ஈட்டிய 15000 ரூபாயும் பறிமுதல் செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 3 பேர் மீது குண்டு சட்டம் பாயும் என்று தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமுல்ராஜ் கூறியதோடு  திறன்பட செயல்பட்ட போலீசாரை வெகுவாக பாராட்டினார்.