ஒரே குடும்பத்தில் 6 பேர் மரணம்...காரணம் என்ன?

ஒரே குடும்பத்தில் 6 பேர் மரணம்...காரணம் என்ன?
Published on
Updated on
1 min read

திருவண்ணாமலையில் குடும்பப் பிரச்னையால் மனைவி மற்றும் 4 பிள்ளைகளைக் கொன்றுவிட்டு கணவனும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் அருகே உள்ள மோட்டூர் பகுதியில், பழனி - வள்ளி என்ற தம்பதியினர் தங்கள் 5 குழந்தைகளுடன் வசித்து வந்தனர். தம்பதி இடையே கடந்த சில நாட்களாகவே குடும்பப் பிரச்னை நீடித்து வந்ததாகத் தெரிகிறது.

தொடர்ந்து நீடித்து வந்த குடும்ப பிரச்னையானது, ஒரு கட்டத்தில் பூகம்பமாய் வெடித்தது. இதில் ஆத்திரமடைந்த கணவர் பழனி, முதலில் தனது மனைவி வள்ளியை அரிவாளால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்துள்ளார். அதைத்தொடர்ந்து, தனது 5 குழந்தைகளான த்ரிஷா, மோனிஷா, சிவசக்தி, தனுஷ் மற்றும் பூமிகா ஆகிய பிள்ளைகளையும் அடுத்தடுத்து கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த கோர சம்பவத்தில் 9 வயது சிறுமி பூமிகா தவிர மற்ற 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பூமிகாவை மருத்துவமனையில் அனுமதித்ததோடு, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், குடும்பப் பிரச்னையால் மனைவி மற்றும் 4 பிள்ளைகளைக் கொன்றுவிட்டு கணவனும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com