கலாஷேத்ரா விவகாரம் : உதவி பேராசிரியர் ஹரி பத்மனுக்கு ஜாமின்...!

கலாஷேத்ரா விவகாரம்  : உதவி பேராசிரியர் ஹரி பத்மனுக்கு ஜாமின்...!
Published on
Updated on
1 min read

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தாக கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மனுக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மணி அருண்டேல் கல்லூரியில் படித்தபோது பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக முன்னாள் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அடையாறு அனைத்து மகளிர் போலீசார், கல்லூரியின் நடன துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மனை  ஏப்ரல் 3ம் தேதி கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஹரி பத்மன் தாக்கல் செய்த மனு சைதை மாஜிஸ்திரேட் நீதிமன்றம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆகியவற்றால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மே முதல் வாரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு மகளிர் ஆணையம் தரப்பில், 103 மாணவிகளிடம் விசாரித்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்திருந்தது.

இதையடுத்து, நீதிபதி இளந்திரையன், ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூன் மூன்றாவது வாரத்திற்கு தள்ளிவைத்ததால், தன் மனுவை ஹரி பத்மன் வாபஸ் பெற்றார்.

இந்நிலையில் கடந்த வாரம் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ஹரி பத்மன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கி ஜூன் 3ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க     | 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com