கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை கடந்த மாதம் 27ம் தேதி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, கூடுதல் விசாரணைக்கு அனுமதி கேட்டு காவல்துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அனுமதி கிடைத்ததை அடுத்து, தனிப்படை அமைத்து, மறு விசாரணையானது உதகையில் உள்ள பழைய எஸ்.பி அலுவலகத்தில் நடைப்பெற்றது.