கூவம் ஆற்றில் கரை ஒதுங்கிய ஆண் சடலம்..!

சென்னை திருமங்கலம் பகுதியில் கூவம் ஆற்றின் கரையோரம் ஆண் சடலம் ஒதுங்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கூவம் ஆற்றில் கரை ஒதுங்கிய ஆண் சடலம்..!
Published on
Updated on
1 min read

சென்னை திருமங்கலம் ரயில் நகர் கூவம் ஆற்றில் பொதுப்பணித் துறையினர் தூர்வாரும் பணியை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று ஜே.சி.பி இயந்திரம் மூலமாக ஆற்றில் தூர்வாரி கொண்டிருந்தபோது திடீரென்று ஐந்தரை அடி உயரம் கொண்ட ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, பொதுப்பணித் துறையினர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத இந்த ஆண் சடலம் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே  இறந்தவர் கொலை செய்யப்பட்டுள்ளாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும், கூவம் ஆற்றில் தூர்வாரும் போது எலும்புக்கூடாக  ஆண் சடலம் ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com