பரப்பரப்பான சிக்னல் அருகே பயங்கரம்...கடை வாசலில் வெட்டிக்கொல்லப்பட்ட மெக்கானிக்...!

திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள வாணி விலாஸ் சிக்னல் அருகே டூவீலர் மெக்கானிக் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரப்பரப்பான சிக்னல் அருகே பயங்கரம்...கடை வாசலில் வெட்டிக்கொல்லப்பட்ட மெக்கானிக்...!

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர்  சரவணன். இவருக்கு சுந்தரி என்ற மனைவியும் லாவண்யா என்ற மகளும், தேவேஸ் என்ற மகனும்  உள்ளனர். இவர் திண்டுக்கல் நகரின் மையப்பகுதியான வாணி விலாஸ் சிக்னல் அருகே மெக்கானிக் ஒர்க் ஷாப் சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார். 

இந்நிலையில்,நேற்று இரவு தனது ஒர்க் ஷாப் முன்பு தலையில் பலத்த காயத்துடன் ரத்தவெள்ளத்தில் கிடந்தார். இதை கவனித்த அருகிலுள்ள கடைக்காரர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  படுகாயமடைந்த சரவணனை உடனடியாக மீட்டு  திண்டுக்கல் அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்,சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து  தகவலறிந்த  மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களை வைத்து பல்வேறு கோணங்களில்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும்,மக்கள் நெருக்கம் அதிகமான, அதுவும் சிக்னல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இடத்தில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.