பட்டறை உரிமையாளர் மீது கொலைவெறி தாக்குதல்..!

பட்டறை உரிமையாளர் மீது கொலைவெறி தாக்குதல்..!

சேலத்தில் பட்டறை உரிமையாளரை முகமூடி அணிந்த மர்மகும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.

செவ்வாய்பேட்டை சேர்ந்த பட்டறை உரிமையாளர் சிவகுமாருக்கும், ஏழுமலை என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் காரணமாக பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில் பட்டறையில் இருந்த சிவகுமாரை, முகமூடி அணிந்து வந்த மர்மகும்பல்  இரும்பு கம்பி மற்றும் அரிவாளால் சராமரியாக தாக்கினர். இந்த காட்சி  வைரலாகி வருகிறது.