பயிற்சி வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நாகராஜனுக்கு 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

பயிற்சி வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான தடகள பயிற்சியாளர் நாகராஜனை 11  ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க  போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பயிற்சி வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நாகராஜனுக்கு 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
Published on
Updated on
1 min read

தடகள வீராங்கனைகளுக்கு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி சேர்ந்த நாகராஜன் என்பவர் கடந்த மே 28 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை மூன்று நாள் காவலில் எடுத்து  போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் இன்று காவல்  முடிந்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில்   ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது   11 ஆம் தேதி வரை நாகராஜனை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி முகமது பாரூக் உத்தரவிட்டதை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com