புதிய வாகனத்தில் தீ வைத்த நபர்கள்...! கைது செய்த போலீசார்..!

புதிய  வாகனத்தில் தீ வைத்த நபர்கள்...! கைது செய்த போலீசார்..!

புதிதாக வாங்கி வீட்டில் நிறுத்தி வைத்திருந்த இருச்சக்கர வாகனத்திற்கு தீ வைத்துள்ளனர்.

சென்னை அமைந்தக்கரை எம்.எச்.காலணி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த ராஜ்.  இவர் தன் மகள் கனகவள்ளிக்கு புதிதாக இருசக்கர வாகனத்தை கடந்த 10 ஆம் தேதி வாங்கி கொடுத்துள்ளார்.  வழக்கம் போல் வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் எம்.எச் காலனி பகுதிக்கு வந்த சில மர்ம நபர்கள் கனகவள்ளியின் இருசக்கர வாகனத்தின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அமைந்தகரை போலீசார், இருசக்கர வாகனம் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  

அந்த விசாரணையில் ஆனந்தராஜ் மகளின் இருசக்கர வாகனத்திற்கு அமைந்தகரை பகுதியை சேர்ந்த  சரவணன் (37) தனது நண்பர்களான பாடி பகுதியை சேர்ந்த அலெக்ஸ் (21) மற்றும் முகப்பேர் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் (19) ஆகியோர் முன் பகை காரணமாக ஆனந்தராஜின் மகள் கனகவள்ளியின் இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக சரவணன், அலெக்ஸ், ஸ்டீபன் ஆகிய மூன்று பேரையும் அமைந்தகரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்டுள்ள நபர்களிடமிருந்து, ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதையும் படிக்க : வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி...! 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு...!