குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெரியப்பா...விபத்தில் இறந்ததாக நாடகம்..! ரிப்போர்ட்டில் சிக்கிய கொடூரன்!!
2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிய பெரியப்பாவை போலீசார் கைது செய்த சம்பவம் பெங்களூருவில் அரங்கேறியுள்ளது.
பெங்களூரு புறநகர் மாவட்டம் நெரலூர் கேட் பகுதியை சேர்ந்தவர் தீபு. இவருக்கு ஒரு தம்பி உள்ளார். அவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளதால் தொட்டபள்ளாப்புராவில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொட்டபள்ளாப்புராவுக்கு வந்த அண்ணன் தீபு, தனது சகோதரரின் குழந்தையை நெரலூர் கேட்டுக்கு அழைத்து வந்தார். அந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட தீபு, 2பெரியப்பா என்ற ஸ்தானத்தை மறந்து அந்த குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அப்போது வலியின் கொடுமையை தாங்க முடியாத அந்த சின்ன குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது. உடனே தன் மீது எந்த குற்றமும் வரக்கூடாது என்ற பயத்தில் போலீஸ் நிலையம் சென்ற தீபு, காரில் வரும் போது சகோதரர் குழந்தை கீழே விழுந்து இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசாருக்கு, ஒரு பக்கம் தீபுவின் மேல் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அந்த 2 வயது குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அதில் குழந்தையை பலாத்காரம் செய்து கொன்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தையின் பெரியப்பாவான தீபு கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், 2 வயது குழந்தையை தீபு, பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடியது தெரியவந்தது. விசாரணைக்கு பின்பு தீபு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.