சிறுமியை கட்டாய திருமணம் செய்த வாலிபர்...போக்சோ சட்டத்தில் கைது...

13 வயது சிறுமியை கடத்தி் சென்று கட்டாய திருமணம் செய்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

சிறுமியை கட்டாய திருமணம் செய்த வாலிபர்...போக்சோ சட்டத்தில் கைது...
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் கோபி. கட்டுமான கூலி தொழிலாளியான இவர் ஓடப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி, கடந்த 18ஆம் தேதி கடத்திச் சென்றுள்ளார்.
 
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த, புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், கோபி சிறுமியை கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் கோபியை கைது செய்த போலீசார், மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின் சிறையில் அடைத்தனர்.