சிறுமியை கட்டாய திருமணம் செய்த வாலிபர்...போக்சோ சட்டத்தில் கைது...
13 வயது சிறுமியை கடத்தி் சென்று கட்டாய திருமணம் செய்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

காபி போட பிரிட்ஜ் திறந்த பொழுது பரிதாபம். மின்சாரம் பாய்ந்து பிரிட்ஜ் வெடித்ததில் மூதாட்டிக்கு பயங்கர தீக்காயம். இரண்டு மகன்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
சென்னை அம்பத்தூர் கருக்கு பாரத் நகரில் வசித்து வருபவர் கண்ணகி வ/ 50 என்பவர் வீட்டில் பிரிட்ஜ் வெடித்ததில் கண்ணகி வ/50 என்பவருக்கு காயங்கள் ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு மீட்பு படையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் முதல் உதவி சிகிச்சைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பிரிட்ஜ் வெடித்து வீடு முழுவதும் தீ பற்றிய நிலையில் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். கண்ணகி தன் இரண்டு மகன்கள் உடன் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும். அவரது கணவர் காவல் துறையில் உதவி ஆய்வாளர் பணி செய்து ஓய்வு பெற்று இறந்துவிட்டதாகவும்.
மேலும் படிக்க |CSK கோப்பைக்கு தி.நகரில் சிறப்பு பூஜை!!!
இன்று சம்பவ நேரத்தில் வீட்டின் குளிர்சாதனப் பெட்டியை திறந்த பொழுது குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு உடம்பில் தீக்காயம் ஏற்பட்டதாகவும் காரணமாக வீட்டில் புகை மண்டலம் சூழ்ந்தால் அவரது இரண்டு மகன்களுக்கும் லேசான மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் உடனடியாக அருகில் இருந்தவர்கள் இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடம் வந்த அம்பத்தூர் தீனைப்பு மீட்பு துறையினர் விசாரணையில் உயர் மின்னழுத்தம் காரணமாக மின்கசிவு ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.நடந்த சம்பவம் தொடர்பாக அம்பத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லையில் நகை வியாபாரியிடம் பெப்பர் ஸ்பிரே அடித்து ஒன்றரைக் கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை டவுன் பகுதியில் தங்க நகை மொத்த விற்பனை மற்றும் தர பரிசோதனை கடை நடத்தி வரும் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த சுஷாந்த் என்பவர் தங்கம் வாங்குவதற்காக இன்று அதிகாலை தனது வீட்டில் இருந்து கார் மூலம் கேரள மாநிலம் சென்றுள்ளார். இது குறித்த தகவலை அறிந்த மர்ம நபர்கள் இரண்டு கார்களில் அவரை பின்தொடர்ந்து சென்று மூன்றடைப்பு ரயில்வே மேம்பாலம் அருகே காரை வழிமறித்து மிளகு ஸ்பிரே அடித்து கார் கண்ணாடிகளை உடைத்து பணத்தை திருட முயற்சித்துள்ளனர்.
அப்போது பின்னால் வந்த சொகுசு பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணிகள் அடிதடி சம்பவம் நடப்பதை கண்டு இறங்கி கூச்சலிடத் தொடங்கியதும் உஷாரான மர்ம நபர்கள் அவர் வந்த காரிலேயே அழைத்துக் கொண்டு நாங்குநேரி டோல்கேட் அருகே உள்ள நெடுங்குளம் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு இருக்கும் காட்டுப் பகுதிக்கு செல்லும் ஒற்றையடி பாதையில் காரை நிறுத்தி காரில் இருந்த சுமார் ஒன்றரை கோடி பணத்தை எடுத்துக் கொண்டு தப்பியுள்ளனர்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நாங்குநேரி டிஎஸ்பி தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும் சிசிடிவி கேமராவில் பதிவான கார் பதிவு எண் உள்ளிட்டவைகள் கொண்டும் தீவிரமாக காரில் இருந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சுசாந்துடன் காரில் இருந்த நபரிடமும் மூன்றடைப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் ஆய்வு மேற்கொண்டு உள்ளார். மேலும் சுஷாந்த் ஓட்டி வந்த காரில் தடய அறிவியல் துறை நிபுணர்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்து வருகின்றனர். நெல்லை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிக்க:ஆசிரியர் தேர்வு வாரியம் உறங்குகிறதா? அன்புமணி கேள்வி!
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர்களின் ஐந்தாவது நாளாக பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் கடந்த 4 நாட்களாக வருமான வரித்துறை அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று செந்தில் பாலாஜியின் நண்பரும் அரசு வேலைகளின் ஒப்பந்ததாரருமான சங்கர் ஆனந்த் அலுவலகத்தில் சோதனை நடத்தி, சீல் வைத்து நோட்டில் ஒட்டப்பட்டது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூரில் உள்ள துணை மேயர் தாரணி சரவணன் வீடு, சோடா கம்பெனி உரிமையாளர் வீடு, வையாபுரி நகர் பகுதியில் ஆடிட்டர் அலுவலகம், காந்தி கிராமம் பிரேம்குமார் - சோபனா தம்பதியினர் வீடு, செங்குந்தபுரத்தில் உள்ள அரசு பணிகளின் ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்த் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு, சீல் வைக்கப்பட்டது.
அதேபோல், தான்தோன்றி மலையில் உள்ள சுரேந்தர் என்பவரின் உணவகம் மற்றும் வீடு உட்பட பல்வேறு இடங்களில் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 5-வது நாளாக இன்றும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. முந்தைய சோதனைகளில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டுள்ளதாக வருமான வரித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகியோரின் அலுவலகம் அடங்கியுள்ள துணி நெய்யும் நிறுவனத்திலும் வருமானவரி துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க:ஆசிரியர் தேர்வு வாரியம் உறங்குகிறதா? அன்புமணி கேள்வி!
கடந்த 13ஆம் தேதி விழுப்புரத்தில் விஷ சாராயம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ள மதுபானம் அருந்தி 14பேர் உயிரிந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீனவக் கிராமமான எக்கியார் குப்பத்தில், கடந்த 13ஆம் தேதி விஷ சாராயம் அருந்திய 70-க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விஷ சாராயம் அருந்தியவர்களில், சிகிச்சை பலனின்றி 14 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் பூரணமாக குணமடைந்து, வீடு திரும்பிய நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 5 பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
விஷ சாராய வழக்கில், இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானம் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக, காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த உயிரிழந்த சம்பவத்தின் பரபரப்பு இன்னும் குறையாத நிலையில், விழுப்புரம் சந்திப்பு ரயில் நிலையத்தில் பட்டப் பகலில், பல பேர் முன்னிலையில் போதை ஆசாமிகள் இருவர், கள்ளச் சாராயம் குடித்துள்ளனர்.
இந்த வீடியோ வைரலான நிலையில் கள்ளச் சாராயத்தை தடுக்க காவல்துறை என்னதான் நடவடிக்கை எடுத்தாலும், விழுப்புரத்தில் கள்ளச்சாராய விற்பனை கொடிக்கட்டி பறப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தற்போது விழுப்புரத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்காய், விழிப்புடன் செயல்பட்டு, கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் ஒழித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க: ராசிபுரம் தும்பல்பட்டி பகுதியில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி...!!
விரைவு ரயிலில் செயினை பறித்துக் கொண்டு ரயிலில் கழிவறையில் ஒளிந்து கொண்ட வட மாநில கொள்ளையனை துரிதமாக செயல்பட்டுகழிவறையில் சிக்க வைத்து பிடித்துள்ளார் ஊர்க்காவல் படை வீரர்.
சீரடியில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்து கொண்டிருந்த சாய் நகர் விரைவு ரயிலில் இன்று அதிகாலை 2:30 மணி அளவில் பயணிகள் தூக்கத்திலிருந்த போது மதுரையைச் சேர்ந்த ரயில் பயணியின் கழுத்தில் இருந்த செயினை வடமாநில இளஞன் பறித்து தப்பித்து சென்றுள்ளான்.
உடனடியாக ரயில் பயணிகள் கூச்சலிடவே சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த ஊர் காவல் படை வீரர் தேவராஜ் என்பவர் திருடனை விரட்டிச் சென்ற பொழுது ரயிலின் கழிவறையில் உள்ளே சென்று தாழ்ப்பாள் போட்டு மறைந்துள்ளான்.
அப்போது ஊர் காவல் படை வீரர் உடனடியாக திருடன் வெளியில் வராத அளவிற்கு கதவை கயிற்றினால் கட்டி பின்பு விரைவு ரயில் கர்நாடகா மாநிலம் இலங்கா என்ற ஸ்டேஷனில் நின்ற பொழுது அங்கிருந்த ரயில்வே போலீசாரிடம் தகவல் தெரிவித்து அவரை ரயில் பெட்டிக்கு அழைத்து வந்து கழிவறையில் பதுங்கி இருந்த வட மாநில இளைஞரை பிடித்துக் கொடுத்துள்ளார்.
விரைவு ரயிலில் அதிகாலை நேரத்தை பயன்படுத்தி தூக்கத்தில் இருக்கும் ரயில் பயணிகளிடம் அடிக்கடி செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு, சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பல நாள் திருடனை துரிதமாக செயல்பட்டு கண்டுபிடித்த ஊர்க்காவல் படை வீரர் தேவராஜை ரயில் பயணிகள் அனைவரும் பாராட்டினர்.
இதையும் படிக்க: மர்மமான முறையில் உயிரிழந்த கர்ப்பிணி பெண்..!!