மனைவியை கட்டாயப்படுத்தி விபச்சாரத்துக்கு அனுப்பி வைக்கும் கணவர்...விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்

குடும்ப விழா என்ற பெயரில் மனைவிகளை பாலியல் தொழிலுக்கு அனுப்பி பணம் சம்பாதிக்கும் 7 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.

மனைவியை கட்டாயப்படுத்தி விபச்சாரத்துக்கு அனுப்பி வைக்கும் கணவர்...விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்

சமூக வலைத்தளங்களில் வாட்ஸ்அப் குரூப், இன்டர்காம் குரூப் என ஏற்படுத்தி, அதன்மூலம் அறிமுகமாகும் நபர்களுக்கு தங்களது மனைவிகளை விபச்சாரத்துக்கு அனுப்பி தொழில் செய்யும் ஏழு வாலிபர்களை கேரளா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரி நகரில் வசிக்கும் ஒரு இளைஞர் தனது மனைவியை கடந்த இரண்டு வருடமாக மற்ற நபர்களுடன் உறவு வைத்துக் கொண்டு பணம் வாங்கி வா என கூறி துன்புறுத்தியுள்ளார். இதற்கு அந்த இளம்பெண் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று  காலை வழக்கம்போல் அந்த வாலிபர் தனது மனைவியை வேறு ஒரு இடத்திற்கு அழைத்துசென்று, அங்கு இருந்த மற்ற நண்பர்களுடன் உறவு வைத்துக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி உள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததோடு மட்டுமில்லாமல், ஆத்திரத்தில் அருகில் உள்ள கருகச்சால் காவல் நிலையத்திற்கு சென்று கணவர் மீது புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் கணவரை அழைத்து விசாரணை செய்தனர்.

அப்போது அந்த வாலிபர் அளித்த சில தகவல்கள் போலீசாரையே  அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர் தீவிர விசாரணையில், அந்த வாலிபர் நாங்கள் சமூக வலைத்தளங்களில் குடும்ப விழா என்ற பெயரில் குரூப் தொடங்கி செயல்பட்டு வருகிறோம். இந்த குரூப்பில் தற்போது 2000 பேர் அங்கத்தினராக செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த குரூப்பில்  நாங்கள் வாரத்திற்கு மூன்று நாள் ஏதாவது ஒரு நண்பர்கள் வீட்டில் குடும்ப விழா என்ற பெயரில் விருந்து ஏற்பாடு செய்து,  ஏராளமான நண்பர்களை கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்போம். இந்த விழா ஓட்டல், லாட்ஜ் என்ற இடங்களில் நடந்தால் மற்றவர்களுக்கும் போலீசாருக்கும் சந்தேகம் ஏற்படும் என்பதால் குறிப்பிட்ட நண்பர்களுடைய வீட்டை தேர்ந்தெடுப்பது வழக்கம். குறிப்பிட்ட நாளில் நடைபெறும் இந்த விழாவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் நண்பர்கள் கலந்து கொள்வார்கள். அப்போது நாங்கள் அழைத்துச் சென்றுள்ள எங்களது மனைவிகளை அந்த நண்பர்களுடன் உறவு வைத்துக் கொண்டு அவர்களிடமிருந்து பணம் பரிப்பது வழக்கம். இதன் மூலம் எங்களுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் பணம் வருமானம் கிடைப்பதால், அதன் மூலம் நாங்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம் என அந்த வாலிபர் போலீசில் தெரிவித்தார்.

இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் வாலிபரின் செல்போனை வாங்கி பரிசோதனை செய்தபோது, அதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  உறுப்பினர்கள் இருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் தரப்பில் கூறியபோது, கேரளாவில் 'ஜோடியை மாற்றி கொள்ளும் வாட்ஸ் அப் குழு இயங்கி வருகிறது. இதன்மூலம் சுமார் 1,000 ஆண்கள் தங்கள் மனைவிகளை உடலுறவுக்காக மாற்றிக் கொள்ள தயாராக உள்ளதாக காவல்துறை தரப்பில் கூறுகின்றனர்.

ஒரு நபர் அந்த குரூப்பில் உள்ள வாலிபருக்கு போன் செய்து உனது மனைவியை அனுப்பி வை என கேட்கும் போது, அவரின் மனைவி பிசியாக இருந்தால், வேறு மனைவியை அழைத்து அனுப்பி வைப்பதும் இவர்களுடைய வழக்கமாக உள்ளது. விசாரணை நடத்தியதில், சில அரசு உயரதிகாரிகளும், தனியார் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகளும் இந்த குரூப்பில் அங்கத்தினர்களாக இருக்க வாய்ப்பு உள்ளதாக  போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அந்த வாலிபரை விசாரித்தன் மூலம் தற்போது  7 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீதமுள்ளவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த விசாரணையின் மூலம் பல திடுக்கிடும் ரகசியங்கள் வெளிவரும் என கோட்டையம் போலீசார் தெரிவித்துள்ளனர்.