காவல்நிலையத்தில் பாலியல் புகார் அளிக்க சென்ற சிறுமியை கர்ப்பமாக்கிய காவலர் கைது...

கர்நாடகா மாநிலத்தில் பாலியல் புகார் அளிக்க வந்த 16வயது சிறுமியை கர்பமாக்கிய காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்நிலையத்தில் பாலியல் புகார் அளிக்க சென்ற சிறுமியை கர்ப்பமாக்கிய காவலர் கைது...
Published on
Updated on
1 min read

கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் அருகே கடபா பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை தொடர்பாக  கடப்பா காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றார், அப்போழுது அந்த காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் சிவராஜ் என்ற காவலர் விசாரணை நடத்துகிறேன் என்ற போர்வையில் அடிக்கடி சம்மன் கொடுக்கச் சென்ற சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி போகும்போது, புகார் அளிக்க வந்த சிறுமியை தானும் வன்கொடுமை செய்து கர்ப்பிணியாக்கியுள்ளார்.

காவலர் சிவராஜ் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக வழக்குகள் முடிந்து இருந்தாலும், மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு சாக்கு போக்கு சொல்லி அடிக்கடி சிறுமியின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். மேலும் சிறுமியிடன் ஆசை வார்த்தை கூறியும் மிரட்டியும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் தற்போது சிறுமி 5 மாத கர்ப்பிணி ஆனார். இந்நிலையில், சிறுமியின் கர்ப்பம் அறிந்த பெற்றோர் விசாரணை மேற்கொண்டபோது, காவலர் சிவராஜ் தான் தனக்கு திருமண ஆசை காட்டி ஏமாற்றியதாக கூறியுள்ளார். அதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் சிவராஜை தொடர்பு கொண்டு கேட்ட போது, தன்னால் திருமணம் செய்ய இயலாது. வேண்டுமெனில் கர்ப்பத்தை கலைத்துக் கொள்ளுங்கள் என்று திமிராக கூறியுள்ளார். 

அதனைத் தொடர்ந்து கடந்த 18ம் சிறுமியும் அவரது தாயாரும் மருத்துவமனைக்கு சென்று உள்ளனர். பிறகு இதுவரை வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், மருத்துவமனைக்கு சென்ற சிறுமியின் தாயார், தன் கணவருக்கு போன் செய்து காவலர் சிவராஜ் 35 ஆயிரம் ரூபாய் கர்ப்பத்தை கலைக்க செலவுக்காக ஆன்லைன் மூலம் அனுப்பி உள்ளார் என்ற விவரத்தை மட்டும் கூறியுள்ளார்.ஆனால், எங்கு இருக்கிறேன் என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை தற்போது, முதலமைச்சர் அலுவலகத்திற்கும் கடப்பா காவல் நிலையத்திற்கும் புகார் கொடுக்கப்பட்டதனை தொடர்ந்து, கடப்பா போலிஸார் வழக்குப்பதிவு செய்து சிவராஜை கைது செய்து செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலியல் புகார் அளிக்க சென்ற சிறுமியை காவலர் ஒருவரே வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com