பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை... போலீசிடம் காட்டிக்கொடுத்த மனைவி!

சென்னை புழல் அருகே பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை... போலீசிடம் காட்டிக்கொடுத்த மனைவி!
Published on
Updated on
1 min read

புழல் அடுத்த வினாயகபுரம் காஞ்சி நகரில் வசித்து வருபவர் சையத் சர்பிராஸ் நவாஸ். இவர் காங்கிரஸ் கட்சியின் பிரமுகராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், தனது 14 வயது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சிறுமியின் தாய் புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து தந்தை சையத் சர்பிராஸ் நவாஸிடம்  விசாரணை நடத்தியதில், அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். தீவிர விசாரணை நடத்தியதில் அவர் மீது பல குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com