இன்ஸ்டா காதல்... 2 பிள்ளைகளுடன் தாய் மாயம்.. கள்ளகாதலனுக்கு போலீஸ் வலைவீச்சு!

இன்ஸ்டாகிராமில் பழக்கமான கள்ளக்காதலனுடன் ஓடிய இளம்பெண்ணையும் அவரது 2 குழந்தைகளையும் போலீசார் புனேவில் மீட்ட சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

இன்ஸ்டா காதல்... 2 பிள்ளைகளுடன் தாய் மாயம்.. கள்ளகாதலனுக்கு போலீஸ் வலைவீச்சு!

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இருப்பினும் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்த பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் 27 வயது வாலிபர் ஒருவருடன்  பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இந்நிலையில் கடந்த மாதம் அந்த இளம்பெண் தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் இருந்து தப்பித்து கள்ளக்காதலனுடன் ஓடியுள்ளார். பின்னர் இது குறித்து இளம்பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே இளம்பெண்ணின் மகள் செல்போன் மூலம் தன் தந்தைக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அண்ணனையும், தன்னையும் ஒருவர் அடித்து துன்புறுத்தி வருவதாகவும், எங்களை காப்பாற்றும்படியும் கூறி கதறி அழுதுள்ளார். மகள் பேசியதை தந்தை போலீசாரிடம் கூற, அவர்கள் சிறுமி பேசிய செல்போன் எண்ணை ஆய்வு செய்து அவர்கள்  இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர்.

அதன்பிறகு மராட்டிய மாநிலம் புனேக்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த இளம்பெண்ணையும் அவரது 2 குழந்தைகளையும் மீட்டு, பெண்ணின் கணவரிடம் ஒப்படைத்தனர். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் தலைமறைவான கள்ளக்காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.