பப்ஜி மதனை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்றுவந்த நிலையில், இன்று மதியம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பப்ஜி மதனை போலீஸ் காவலில் எடுத்துவிசாரிக்க அனுமதிகோரிய நிலையில் ஜூலை 3ஆம் தேதி வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து பப்ஜி மதன் இன்று சிறையில் அடைக்கப்படுகிறார்.