ஒரே வாகனத்திற்கு இரண்டு பேரில் பதிவு... என்ன தான் செய்கின்றனர் அதிகாரிகள்?

சென்னையில் திருடப்பட்ட இருசக்கர வாகனம், ஓனருக்கு தெரியாமலேயே, கடலூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வேறொரு நபருக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொறுப்பில்லாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகாரளிக்கப்பட்டுள்ளது.

ஒரே வாகனத்திற்கு இரண்டு பேரில் பதிவு... என்ன தான் செய்கின்றனர் அதிகாரிகள்?

சென்னை சைதாப்பேட்டை சடையப்பன் தெருவை சேர்ந்தவர் அமுதராஜ்(23) பொறியியல் பட்டதாரியான இவர் தனது படிப்பை முடித்துவிட்டு சென்னையில் வேலை தேடி வருகிறார். 

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 6-ம் தேதி தனது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். தனது இரு சக்கர வாகனத்தை கண்டுபிடித்து தருமாறு குமரன் நகர் காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளோடு அமுத ராஜ் புகார் அளித்துள்ளார். 

மேலும் படிக்க | கோவை: மின்கசிவால் உயிரிழந்த தாய், மகள்.. சோகத்தில் உறவினர்கள்..!

புகாரின் பேரில் குமரன் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் தனது இருசக்கர வாகனத்தின் ஆவணங்களை எடுப்பதற்காக ஆன்லைனில் சோதனை செய்துள்ளார். அப்போது இவரது இரு சக்கர வாகனம் அமீர் அப்பாஸ் என்ற பெயருக்கு மாறி இருப்பது தெரியவந்தது.

இதனால், அதிர்ச்சி அடைந்த அமுதாராஜ் கே.கே நகர் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு சென்று அதிகாரியிடம் கேட்டுள்ளார். அப்பொழுது அமுததாஜின் இருசக்கர வாகனம் கடலூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பெயர் மாற்றப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | ஆட்டோ டிரைவர்களுக்கு ஆர்.டி.ஓ அறிவுரை!

அதிர்ச்சி அடைந்த அமுதராஜ் மீண்டும் குமரன் நகர் காவல் நிலையத்திற்கு சென்று தனது இரு சக்கர வாகனத்தின் பெயர் பதிவானது தனது கையெழுத்து இல்லாமலே ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து தனது இரு சக்கர வாகனத்தை மீட்டு தருமாறும் மீண்டும் புகார் அளித்துள்ளார்.

ஆனால், குமரன் நகர் காவல் நிலையத்தில் இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்காமல் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அமுதராஜை அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில் மூன்று பேர் கைது...

சி.சி.டி.வி காட்சிகள், இருசக்கர வாகனத்தின் ஆவணங்கள், பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆவணங்கள் என அனைத்தையும் குமரன் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த பிறகும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் குமரன் நகர் போலீசார், கடலூர் ஆர்.டி.ஓ அலுவலக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கூறியும் தனது இரு சக்கர வாகனத்தை மீட்டு தரக்கோறியும் அமுதராஜ் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். 

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமுதராஜ், தனது இரு சக்கர வாகனத்தின் பதிவை தனது கையெழுத்து இல்லாமலே வேறொருவர் பெயருக்கு மாற்றப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க | “மருந்துகள் ஏழை மக்களை சென்றடைவதில்லை” - சென்னை உயர் நீதிமன்றம் வேதனை

மேலும், ஒரு வாகனத்தின் உரிமையாளர் இல்லாமல் வேறொரு நபருக்கு ஆர்.டி.ஓ அதிகாரிகள் எப்படி மாற்றம் செய்து கொடுத்தார்கள்? எனவும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட கடலூர் ஆர்.டி.ஓ அலுவலக அதிகாரிகளுக்கு கால் செய்து கேட்டபோது அலட்சியமாக, மிரட்டும் தொனியில் பதில் அளித்ததாகவும் அமுதா ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், அனைத்து ஆவணங்களையும் குமரன் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த பிறகும் தன்னை போலீசார் தினம்தோறும் காவல் நிலையம் வரச் சொல்லி அலைக்கழித்து மரியாதை குறைவாக நடத்தியதாகவும் குமரன் நகர் போலீசார் மீது குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும் படிக்க | காதலனைக் கூட நம்பமுடியவில்லை... சிறுமிக்கு கொடுமை செய்த கயவர்கள் கைது...

கடந்த 40 நாட்களுக்கு மேலாக தன்னால் இன்டர்வியூக்கு செல்ல முடியவில்லை எனவும் தனது குடும்பத்தினர் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர், குமரன் நகர் போலீசார் மற்றும் கடலூர் ஆர்.டி.ஓ அலுவலக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தனது இருசக்கர வாகனத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் எனவும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | விடிய விடிய சோதனை செய்த போக்குவரத்து காவல்துறையினர்...