ஆடு திருடர்களை பிடிக்க முயன்ற எஸ்.ஐ. வெட்டிப் படுகொலை... இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் துணிகரம்...

புதுக்கோட்டை அருகே ஆடு திருடர்களை விரட்டி  பிடிக்க முயன்ற  காவல்துறை எஸ்.எஸ்.ஐ. வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆடு திருடர்களை பிடிக்க முயன்ற எஸ்.ஐ. வெட்டிப் படுகொலை... இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் துணிகரம்...
Published on
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன். இவர் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, புதுக்கோட்டை மாவட்டம் பள்ளத்துப்பட்டியில், இரண்டு இருசக்கர வாகனங்களில்  ஆடுகளுடன்  சிலர் அதிவேகமாக சென்றதாக தெரிகிறது.

இதனை கண்ட எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன், அவர்களை துரத்திச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, அதில் ஒரு திருட்டு கும்பல், எஸ்.எஸ்..ஐ. பூமிநாதனை அரிவாளால் சரமாரியாக வெட்டிப் விட்டு தப்பிச் சென்றுள்ளது. இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த பூமிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நள்ளிரவில் இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விசாரணை மேற்கொண்டுள்ளார். மேலும், மீட்கப்பட்ட பூமிநாதனின் உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆடு திருடர்களால் காவல் சிறப்பு  உதவி ஆய்வாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கொள்ளை கும்பலை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com