இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை...தப்பியோட முயன்றவரை மடக்கி பிடித்த போலீஸ்...!!

சென்னையில் இருசக்கர வாகனத்தில் தினமும் கஞ்சா விற்பனை செய்து வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்

இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை...தப்பியோட முயன்றவரை மடக்கி பிடித்த போலீஸ்...!!

சென்னை கோயம்பேடு பகுதியில் நேற்று இரவு போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தார்கள். அப்பொழுது காளியம்மன் கோவில் தெருவாக வந்த நபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

உடனடியாக போக்குவரத்து போலீசார் இரு சக்கர வாகனத்தை சோதனை செய்தார்கள் சோதனையில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா இருப்பதை இதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். இது குறித்து உடனடியாக கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பிறகு அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து வந்த ஒரு வாலிபர் போலீசாரை பார்த்ததும் ஓட முயற்சித்தபோது, அங்கு நின்றிருந்த போலீசார் வாகனத்தை விட்டுவிட்டு ஓடிய நபர் இவர் தான் என சத்தமிட, அங்கிருந்த காவலர்கள் ஓட முயற்சித்த நபரை மடக்கி பிடித்தனர்.

மேலும் அவரிடம் விசாரணை செய்ததில்,  வடபழநி பகுதியை சேர்ந்த இளங்கோ என்பதும் தினமும் வில்லிவாக்கம் சத்யா நகர் ரயில்வே பகுதியிலிருந்து கஞ்சா வாங்கிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் கோயம்பேடு, நெற்குன்றம், வடபழனி, ஆகிய பகுதிகளில் தனக்கு வேண்டப்பட்ட நபர்களிடம் மட்டும் கஞ்சா விற்று வந்தது தெரியவந்தது.மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.