குடிபோதை தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு... சிறைக் காவலர் உட்பட 4 பேர் கைது...

கள்ளிக்குடி அருகே குடிபோதை தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு, சிறைக் காவலர் உட்பட 4 பேர் கைது.

குடிபோதை தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு... சிறைக் காவலர் உட்பட 4 பேர் கைது...
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடி அருகே உள்ள செல்லம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாரிச்செல்வம் வயது (25) இவர் மதுரை சிறை காவலராக பணியாற்றி வந்தார்.
 
தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வீட்டில் இருந்து வந்தார் இவர் நேற்று முன்தினம் இரவு சென்னம்பட்டி சேர்ந்த தனது நண்பர்கள் முத்து இருளன், ஹரிஹரன், சரவண குமார் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தினார்.!
 
அப்போது கள்ளிக்குடி சுந்தரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் , கருணா உள்ளிட்ட 4 பேர் மது அருந்தியுள்ளனர்.
இதில் திடீரென 2 கோஷ்டிகள் இடையே பிரச்சினை உருவாகி வாய்த்தகராறு ஏற்பட்டது.
 
பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது, இதைத் தொடர்ந்து மாரிச்செல்வம் தரப்பினர் அரிவாளால் கருணா மற்றும் கார்த்திகை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரும் திருமங்கலம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்த சம்பவம் குறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தனர்,இது தொடர்பாக சிறை காவலர் மாரிச்செல்வம், முத்து இருளன், சரவணகுமார், ஹரிஹரன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.