ஏடிஎம் கொள்ளை வழக்கு: வடமாநிலத்தில் தனிப்படை முகாம் அமைத்த போலீசார்!

ஏடிஎம் கொள்ளை வழக்கு: வடமாநிலத்தில் தனிப்படை முகாம் அமைத்த போலீசார்!

ஏடிஎம் கொள்ளை வழக்கில் கொள்ளை கும்பல் தலைவன் உட்பட இரண்டு பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்மில் நிகழ்ந்த கொள்ளை சம்பத்தில், கொள்ளையர்கள் ஏடிஎம்களில் இருந்த 73 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். பின்னர் இது தொடர்பான வழக்கில், தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இதையும் படிக்க : தேர்தல் விதிமுறைகளை மீறியதா திமுக கூட்டணி...இணையத்தில் வைரலாகும் வீடியோ!

அப்போது அரியானாவில் வைத்து, முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேரை தனிப்படை போலீசார் கைது செய்து திருவண்ணாமலை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 3-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட நிலையில், இருவரையும் 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில், மீதமுள்ள 8 பேரை பிடிப்பதில் தீவிரம் காட்டி வரும் போலீசார், அதற்காக வடமாநிலத்தில் தனிப்படை முகாம் அமைத்து தேடி வருகின்றனர்.