2-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை.. ஆசிரியர் தான் காரணம் என உறவினர்கள் சாலை மறியல்.. அப்படி அவர் என்ன செய்தார்?

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அரசு பள்ளி மாடியில் இருந்து 9-ம் வகுப்பு மாணவி குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை.. ஆசிரியர் தான் காரணம் என உறவினர்கள் சாலை மறியல்.. அப்படி அவர் என்ன செய்தார்?

திருச்செங்கோடு சீதாராம் பாளையம் சக்திவேல் நகரை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் அர்ச்சனா, இவா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், பள்ளிக்கு சென்ற அர்ச்சனா, மதியம் வாந்தி வருவதாக கூறி பள்ளியின் 2-வது மாடிக்கு சென்றுளளார். அப்போது,  பள்ளியின் 2-வது மாடிக்கு சென்ற அர்ச்சனா, அங்கிருந்து கீழே குதித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிாியா்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில், அனுமதித்தனா். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி மாணவி அர்ச்சனா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் அதிா்ச்சியடைந்த உறவினா்கள், ஆசிரியர் திட்டியதால்தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.