குழவி கல்லை தலையில் போட்டு மாணவி படுகொலை…  

திருவாரூர் அருகே குழவி கல்லை தலையில் போட்டு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

குழவி கல்லை தலையில் போட்டு மாணவி படுகொலை…   

திருவாரூர் அருகே குழவி கல்லை தலையில் போட்டு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மவுலிகா. இந்நிலையில் இவரது உறவினரான சிவசங்கரன், மவுலிகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இவர், இறால் பண்ணையில் வேலைபார்த்து வருவதால் சிவசங்கரனுக்கு பெண் தர மவுலிகாவின் பெற்றோர்கள் மறுத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கரன்  நேற்று இரவு வீட்டுற்கு சென்று தூங்கிக்கொண்டிருந்த மவுலிகாவின் தலையில் அம்மிக்கல்லை போட்டு படுகொலை செய்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிவசங்கரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்