டாஸ்மாக் கடைகளில் திடீர் ரெய்டு... கணக்கில் வராத 32.50 லட்சம் பறிமுதல்...

திருவள்ளூரில் உள்ள பெரியகுப்பம் பகுதியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளில் நேற்று இரவு  அதிகவிலைக்கு மதுபானங்கள் விற்பணை செய்வதாக வந்த புகார்களை அடுத்து நடத்திய சோதனையில் கணக்கில் வராத 32.50 ரூபாய் பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்புதுறை நடவடிக்கை.

டாஸ்மாக் கடைகளில் திடீர் ரெய்டு... கணக்கில் வராத 32.50 லட்சம் பறிமுதல்...

திருவள்ளூரில் உள்ள பெரியகுப்பம் பகுதியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளில் நேற்று இரவு  அதிகவிலைக்கு மதுபானங்கள் விற்பணை செய்வதாக வந்த புகார்களை அடுத்து நடத்திய சோதனையில் கணக்கில் வராத 32.50 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடைகளில் கூடுதல் விலையில் மதுபானங்கள் விற்பதாக சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு புகார்கள் வந்த நிலையில் நேற்று இரவு  சென்னை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி உத்தரவின்பேரில் துணை கண்காணிப்பாளர் லட்சுமிகாந்தன் ஜாய் டேனியல் தலைமையில் ஆய்வாளர்கள் கார்த்திக் தமிழரசி, பிந்து உள்ளிட்டோர் திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியிலுள்ள இரண்டு அரசு மதுபான கடைகளில் சோதனை நடத்தியதில் இரண்டு கடைகளிலும் கணக்கில் வராத 32 ஆயிரத்து 50 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கடை சூப்பர்வைசர்கள்  மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.