கள்ளத்தொடர்பை கண்டித்த உரிமையாளர்...மனமுடைந்த மேலாளர் தூக்கிட்டு தற்கொலை!!

மில் மேலாளரின் கள்ளத்தொடர்பை மில் உரிமையாளர் கண்டித்ததால் மனமுடைந்த மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கள்ளத்தொடர்பை  கண்டித்த உரிமையாளர்...மனமுடைந்த மேலாளர் தூக்கிட்டு தற்கொலை!!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், புதுக்கோட்டை ஆலங்குடி அருகே உள்ள தனியார் ஆயில் மில்லில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

அந்த மில்லில் சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ரவிச்சந்திரனுக்கும், அதே மில்லில் ஒன்றாக பணியாற்றி வரும் ஒரு பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இவர்களின் கள்ளக்காதல் பற்றி அந்த மில்லின் உரிமையாளர் அலாவுதீனுக்கு தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து கடந்த 14 ஆம் தேதி உரிமையாளர் அலாவுதீன் இவர்களின் கள்ளக்காதல் குறித்து மில் மேலாளர் ரவிச்சந்திரனிடம் விசாரணை நடத்தி கண்டித்து உள்ளார். இதனால் பெரும் மனஉடைச்சலுக்கு ஆளான ரவிச்சந்திரன் மில் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டர். 

இதனை அறிந்த மில் உரிமையாளர்  அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரவிச்சந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.