வட்டார கல்வி அலுவலர் மீது ஆசிரியைகள் பாலியல் புகார்... புகாரை மறுக்கும் வட்டார கல்வி அலுவலர்...
வட்டார கல்வி அலுவலர் மீது கூறப்படும் பாலியல் புகாரின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கல்வி மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் வேடசந்தூர், குஜிலியம்பாறை, வடமதுரை, ரெட்டியார்சத்திரம் ஆகிய நான்கு ஒன்றியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
இதில் வேடசந்தூர் வட்டார கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட நாகக்கோனூரை சேர்ந்த தலைமைஆசிரியர் ராதாராணி மற்றும் பூதிபுரத்தை சேர்ந்த தலைமைஆசிரியர் சாந்தி கருக்காம்பட்டி முத்துச்செல்வி ஆகியோர் வட்டார கல்வி அலுவலர் பா.அருண்குமார் என்ற அதிகாரி மீது பாலியல் புகார் ஒன்று வேடசந்தூர் கல்வி மாவட்ட அதிகாரி இடமும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமும் புகார் கொடுத்தனர்.
அந்த புகாரில் ஒரு தலைமை ஆசிரியையான நீ, சக ஆசிரியர்களை அண்ணா என்று உறவு முறை வைத்து அழைக்கிறாய். அவர்கள் எனக்கு மைத்துனர்கள். அப்போ நான் உங்களுக்கு என்ன வேண்டும் என்றும், அதே நேரத்தில் அந்த தலைமை ஆசிரியையின் தோழியையும் அவரது கணவரையும் தொடர்புபடுத்தி தவறான பார்வையில் பேசப்பட்டு வருவதாகவும், மாதாந்திர அறிக்கை சமர்ப்பிக்க வரும் போதெல்லாம் தவறான பார்வையில் பார்த்து வருவதாக ஒரு தலைமை ஆசிரியை புகார் கொடுத்துள்ளார்.
மற்றொரு தலைமை ஆசிரயையிடம் இரட்டை அர்த்தத்துடன் கணவர் இறந்து தனியாக எப்படி இருக்கிறீர்கள் எனக்கூறி மனதை புண்படும்படி பேசுவதாகவும்,
மற்றொரு தலைமை ஆசிரியை மாதாந்திர அறிக்கை சமர்ப்பிக்க அலுவலகம் சென்றபோது இருக்கையில் அமரச் சொல்லி, டீச்சர் நீங்கள்லாம் எனக்கு எட்டாக்கனியாக இருக்கிறீர்கள் என்று வர்னித்தும் எழுத்தில் சொல்லமுடியாத நாகரீகமற்ற முறையில் நடந்துகொண்டதாகவும், ஆபாச படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பி பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வருவதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வருவதாக வேதனையுடன் புகார் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து வட்டார கல்வி அலுவலர் அருண்குமாரிடம் கேட்டபோது, பாலியல் புகார் கொடுத்த மூன்று பள்ளி தலைமை ஆசிரியைகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது குறித்து அவர்களிடம் எழுத்துப் பூர்வமாக விளக்கம் கேட்டதால், அதன் அடிப்படையில் என்மீது பொய்யான பாலியல் புகார் குற்றச்சாட்டு வைத்துள்ளனர் என்று தெரிவித்தார் தெரிவித்தார்.
வட்டார கல்வி அலுவலர் மீதான புகார் குறித்து வேடசந்தூர் மாவட்ட கல்வி அலுவரிடம் கேட்டபோது, மூன்று பெண்கள் உள்பட ஒரு மாற்றுத்திறனாளி ஆணும் அவர் மீது புகார் கொடுத்துள்ளார். இது சம்பந்தமான விசாரணைகள் நடைபெற்று வருகிறது ஓரிரு நாட்களில் விசாரணையை முடித்து முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு புகார் பற்றிய விளக்கம் சமர்ப்பிக்கப்படும். தொடர்ந்து துறை ரீதியான உண்மை தன்மை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மாணவ மாணவிகளுக்கு கல்வியை கற்பிக்கும் பள்ளிகல்வி துறையிலயே இது போன்ற பாலியல் சார்ந்த குற்றச்சாட்டுகள் நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு பயிலும் பெண் குழந்தைகளுக்கு எவ்வாறு பாதுகாப்பு கிடைக்கும் என்ற கேள்வி எழும்பியுள்ளது. இது சம்ந்தமாக மாவட்ட ஆட்சியர் உடணடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.