அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை!!

திருப்போரூர் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை!!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த இடயாம் குப்பம் வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக திருப்போரூர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் மற்றும் வனத்துறையினர், அழுகிய நிலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதை கண்டனர். சடலத்தை மீட்ட போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்பு இது குறித்து வழக்கு பதிவு செய்து கொலையா? அல்லது  தற்கொலையா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அழுகிய நிலையில் கிடந்த சலத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.