தங்கச்சியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய அண்ணன்...! மருத்துவமனையில் வெளியான உண்மைகள்!!

தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய அண்ணனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தங்கச்சியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய அண்ணன்...! மருத்துவமனையில் வெளியான உண்மைகள்!!

ஆந்திர மாநிலம், நெல்லூர் அடுத்த கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 2 குழந்தைகளையும் கணவனிடம் விட்டுவிட்டு மனைவி வேறு ஒருவருடன் சென்றுவிட்டார். அதற்குபிறகு விவசாயி 2-வதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண வாழ்க்கையில் இவர்களுக்கு 12 வயது சிறுமி உள்ளார். 

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்த 12 வயது சிறுமிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் 12 வயது சிறுமி எப்படி கர்ப்பிணியானால் என்று சந்தேகித்ததால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சிறுமியின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சிறுமியின் கர்ப்பத்திற்கு  அவர் தந்தையின் முதல் மனைவியின் மகன் தான் காரணம் என்பது தெரியவந்தது. சிறுமியின் தந்தையும் தாயும் தோட்ட வேலைக்கு சென்றதும், அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட முதல் மனைவியின் மகன் சிறுமியிடம் ஆசைவார்த்தைக்கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பின்னர் இது குறித்து சிறுமியின் தாய் தந்தை இருவருக்கும் தெரியவந்தும் கூட வெளியே தெரியாத படி பார்த்துக்கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை கர்ப்பமாக்கிய அவரின் அண்ணனை வலைவீசி தேடி வருகின்றனர்.