கல்யாணம் செய்து வைக்க சொல்லிய மகனை கழுத்திலேயே வெட்டிய தந்தை... 

திருமணம் செய்து வைக்க வேண்டிய  தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தன்  மகனையே தந்தை வெட்டி படுகொலை செய்து தப்பியோடினார்.

கல்யாணம் செய்து வைக்க சொல்லிய மகனை கழுத்திலேயே வெட்டிய தந்தை... 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே களவனூர் கிராமத்தைச் சேர்ந்த  கேசவன். இவரது மனைவி பழனியம்மாள். இவர்கள் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு சிவமணி என்ற மகனும்,  சிவகாமி  சோனியா என்ற மகள்களும் ஆகிய  உள்ளனர்.  இந்த இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது.

ஆனால் இந்த இரண்டு பெண்களுக்கும் மூத்தவன் பிள்ளை  சிவமணி என்ற வாலிபருக்கு மட்டும் திருமணம் நடைபெறவில்லை.  இருப்பினும் சிவமணி என்பவர் வெளிநாட்டில் மூன்று ஆண்டுகள் தங்கி கூலிவேலை செய்துவிட்டு கடந்த ஓராண்டுக்கு முன்பு களவனூர் கிராமத்திற்கு வந்துள்ளதாக தெரிகின்றது.

ஆனால் வெளிநாட்டில் கூலிவேலை செய்து அனுப்பிய பணத்தை என்ன செய்தாய் என்று தந்தை கேசவனுக்கும், சிவமணிக்கும் கடந்த ஒருவருட காலமாக தந்தை மகனுக்கு இடையே அடிக்கடி சண்டை நடைபெறுவதாக தெரிகிறது. அதனை தொடர்ந்து நேற்று இரவு தந்தையும், மகனும் குடிபோதையில் இருந்த நிலையில், வாய் தகராறு ஏற்பட்டதில் கேசவன் என்பவர் மரம் வெட்டும் கொடுவாளால் தனது மகன் என்று கூடம் பாராமல் சிவமணியின் கழுத்தை பார்த்து கொடூரமாக வெட்டியுள்ளார்.  

இதில் வெட்டுபட்ட சிவமணி இரத்த வெள்ளத்தில் சுருண்டு சம்பவம் நடந்த வீட்டிலேயே இரத்த வெள்ளத்தில் கீழே  உயிருக்கு போராடினார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது இரத்த வெள்ளத்தில் கிடந்த சிவமணியை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. உளுந்தூர்பேட்டை போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் வைத்தனர்.

பின்னர் எதற்காக கொலை நடந்தது என்று போலீசார் விசாரணை செய்தபோது தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய தனது தந்தை கேசவன் என்பவரிடம் சிவமணி கேட்டதாகவும் இதனால் தினந்தோறும் தந்தை மகனுக்கும் அடிக்கடி சண்டை நடைபெறுவதாக தெரிவித்தனர். மகனை வெட்டி கொலை செய்து விட்டு தந்தை தலைமறைவாக விட்டனர். கொலை வழக்கு பதிவு செய்து கொலையாளியை வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.