மசாஜ் செண்டர் ஊழியர்களுக்கு பலத்த ‘மசாஜ்’ கொடுத்த சம்பவம்...

சென்னை விருகம்பாக்கத்தில் மசாஜ் சென்டரில் மசாஜ் செய்து முடித்து அதன் ஊழியர்களை அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மசாஜ் செண்டர் ஊழியர்களுக்கு பலத்த ‘மசாஜ்’ கொடுத்த சம்பவம்...

சென்னை: விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள மசாஜ் செண்டருக்கு கடந்த 5-ம் தேதியன்று அனகாபுத்தூரைச் சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞர் சென்றார். அங்கு பெண் ஊழியர் இருந்து வந்த நிலையில் அவரிடம் மசாஜ் செய்து கொண்டார் சுரேஷ். 

வெகுநேரமாக மசாஜ் செய்து முடித்தவுடன் பணம் கொடுக்கும் சமயத்தில் அந்த பெண் ஊழியரின் சரமாரியாக தாக்கியிருக்கிறார் அந்த இளைஞர். பணம் தர முடியாது என கூறியதோடு, கை, கால்களை கட்டி விட்டு அந்த பெண் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்துக் கொண்டு தப்போடினார். 

மேலும் படிக்க | கேரளாவில் ‘நரபலி’ ... இரு பெண்களை துண்டு துண்டாக வெட்டி புதைத்த பயங்கரம்...

கடந்த 5-ம் தேதியே இந்த சம்பவம் நடந்தாலும், மசாஜ் சென்டரின் உரிமையாளர் எந்த புகாரும் அளித்திருக்கவில்லை. ஆனால் பெண் ஊழியர் புகார் தெரிவித்ததையடுத்து அனகாபுத்தூரைச் சேர்ந்த சுரேஷை போலீசார் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட சுரேஷ், மசாஜ் சென்டருக்கு அடிக்கடி சென்று வருபவர் என்றும் ஒவ்வொரு முறை வரும்போதும், 1500 ரூபாய் கொடுத்து விட்டு சொகுசாக படுத்துக் கொள்வதும் வழக்கம். பணம் கொடுத்து விட்டு உல்லாசம் அனுபவிக்கலாம் என கனவு கண்ட சுரேசுக்கு அது பலிக்காமல் போனது. 

மேலும் படிக்க | #BREAKING | உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிப்பு... தற்கொலை முயற்சியால் பரபரப்பு....

மசாஜ் மட்டுமே செய்து விட்டு திருப்பி அனுப்பியிருக்கிறார் அந்த ஊழியர். இந்த நிலையில் கடந்த 5-ம் தேதியன்று அதே மசாஜ் சென்டருக்கு சென்ற சுரேஷ்  இதுவரை 5 முறைக்கும் மேலாய் வந்துவிட்டேன். ஒரு முறை கூட உல்லாசமாக இருக்க முடியாதா என வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

உடனே அந்த மசாஜ் ஊழியர் கத்திக்கூப்பாடு போட்டதையடுத்து அடித்து உதைத்து கைகால்களை கட்டி நகைகளை பறித்துக் கொண்டு மாயமானான் சுரேஷ். பெண் ஊழியரை அடித்து விட்டு கம்பி ஈட்டிய அந்த இளைஞன் போலீசாரின் தீவிர விசாரணையில் நெம்பி எடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | சென்னை: 17வயது மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திடீர் திருப்பம்.. ஆசிரியை கைது..!