முன்னாள் காதலனை கரம் பிடிக்க கணவனை..... கைது செய்த காவல்துறை!!!

முன்னாள் காதலனை கரம் பிடிக்க கணவனை..... கைது செய்த காவல்துறை!!!

முன்னாள் காதலனை கரம்பிடிக்கும் ஆசையில், கட்டிய கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்குட்பட்ட விலாசபுரம் ஊராட்சி, சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்தவர் யுவராஜ்.  29 வயதான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில், இவருக்கும், காயத்ரி என்பவருக்கும் இடையே [திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தது. 

சென்னையில் செவிலியர் படிப்பின்போதே அதே கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய திருத்தணி அகூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கும், காயத்ரிக்கும் இடையே காதல் மலர்ந்திருந்தது. இந்த விவகாரம் காயத்ரியின் வீட்டில் தெரிந்ததையடுத்து வழக்கம் போல காதலுக்கு குறுக்கே வந்து நின்றனர் காயத்ரியின் பெற்றோர்.

பின்னர் ஒரு வழியாக காதலனை விட்டு விட்டு யுவராஜை கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட காயத்ரிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த பிறகு குடும்ப வாழ்க்கை இயல்பாக சென்றது. என்னதான் கணவன் அன்பாக அனுசரனையாக பார்த்துக் கொண்டிருந்தாலும், காயத்ரிக்கு என்னவோ, அந்த முதல் காதலைத்தான் மனம் தேடியுள்ளது.

முன்னாள் காதலனை பார்ப்பதற்காகவே, திருத்தணியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியில் சேர்ந்துள்ளார் காயத்ரி.  அதே மருத்துவமனையில் ரத்தப்பிரிவில் சீனிவாசன் பணியாற்ற, இருவருக்கும் இடையே மறுபடியும் காதல் மலர்ந்துள்ளது.  இந்த விவகாரம் கணவனுக்கு தெரிந்ததையடுத்து அதற்கு தடை போட்டுள்ளார் யுவராஜ்.  

காதலனை மனதில் வைத்து கணவனுடன் வாழ்வதை விட, கணவனை ஓரம் கட்டி விட்டு காதலனுடன் செல்லலாம் என நினைத்த காயத்ரி இதற்கு தடையாக உள்ள கணவனை கொன்று விடலாம் என்ற எண்ணம் எழுந்துள்ளது. 

காயத்ரியின் கணவன் யுவராஜை சத்தமில்லாமல் கொலை செய்தால்தான் தான் நினைத்தபடி வாழலாம் என முடிவெடுத்த சீனிவாசன், இந்த செயலுக்கு அவரது நண்பர்களை கூட்டு சேர்த்துக் கொண்டுள்ளான். அதன்படி, மணிகண்டன், ஹேமநாதன், ஏமநாதன் ஆகிய நண்பர்களின் உதவியுடன் காயத்ரியின் கணவை கொலை சென்றுள்ளான் சீனிவாசன். 

20-ம் தேதியன்று இரவில் காயத்ரியின் வீட்டுக்குள் புகுந்த சீனிவாசன், நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த யுவராஜின் கை கால்களை நண்பர்கள் பிடிக்க, அவரது மார்பு மீது ஏறி கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளான் சீனிவாசன்.  இதையடுத்து கணவனை கொலை செய்த காதலனை யாருக்கும் தெரியாமல் கதவை திறந்து அனுப்பியுள்ளார் காயத்ரி. 

இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் நடந்ததை கூறி காலில் விழுநது கெஞ்சியிருக்கிறார் காயத்ரி.  காதலனுடன் கரம் கோர்க்க கட்டிய கணவனையே கொலை செய்த  சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிக்க:    அண்ணாமலை சீமான் குறித்த கேள்விகளுக்கு வடிவேலு பாணியில் பதிலளித்த மஸ்தான்!!